கதைக்கும் கவிதைக்கும் காதல் 04

கதைக்கும் கவிதைக்கும் காதல் 04
-------------------------------------------------
அவன் - இனிமை - கதை
=======================
இரவு முழுதும் தூக்கம் இன்றி அவஸ்தைபட்டான் இனிமை .நேரமோ போகாமல்நத்தை வேகத்தில் நகர்ந்து அவனை கொன்றது. நண்பர்கலுக்கு தெரியாமலெழுந்துஅறைக்குள் நடந்து கொண்டிருந்தான். எதிர்பாராமல் ஒருவனின் காலை மிதித்துவிட்டான். யாரடா அது என்று உரத்து கேட்டபோது அந்த இடத்திலேயே தூங்குவதுபோல் நடித்து தூங்கினான். இனிமை..............!!!

ஒருபடியாக பொழுது விடிந்தது. முகம் கழுவதற்கு கிணறுக்கு நண்பர்களுடன் போனான். அங்கும் வின்னியா வரவில்லை. ஒருவாறு முகத்தை கழுவிமுடிந்த தருனத்தில் தோழிகளோடு வந்தாள்" வின்னியா"  ஓரக்கண்ணால் ஒருமுறை இனிமையை பார்த்தாள் .அந்த பார்வையில் தான் இரவு பட்ட துன்பத்தை சொன்னது போல் இருந்தது இனிமைக்கு.............!!!

அவள் - வின்னியா -கவிதை
==========================

ஏய் கரியவனே என் கரிகாலனே......
எதற்கடா என்னை கொல்கிறாய் .....
ஏனடா என் கண்ணில் பட்டாய்......?
ஒவ்வொரு நொடியையும் இரும்பு....
ஆணிமேல் நடப்பது போல் இருகுதடா...!!!

இருட்டில் கூட உன் முகம் பார்தேன்......
விடியும் வரை காத்திருந்தேன் உன்....
கருமுக திருவிழியை காண.......
கண்டேன் உன் முகம் மகிழ்ந்தேன்....
சூரிய ஒளியில் மலர்ந்த தாமரையாய்.....
அகம் மலர்ந்தேன்......................!!!

&

கதைக்கும் கவிதைக்கும் காதல் 04
கவிப்புயல் இனியவனின் 
இன்னுமொரு காதல் பயணம் 
இது உங்கள் கதையாகவும் இருக்கலாம்
தொடர்ந்து படியுங்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05