இனியவனின் அறிவுரை கவிதை 01-10

நீங்கள் பொறுமையாக இருந்தால் ....
----
தூர நோக்கங்கள் நிஜமாகும்
காலம் உனக்கு துணையாகும் ...
வாழ்கை ஒருநாள் வளமாகும்
வானம் கூட வசமாகும் ...!
----
கவிதை ஞானி
-----
உன்னை பார்த்த போது
கவிதை எழுத எண்ணினேன்
உன்னை காணாத போது
கவிதை எழுதினேன்
காதலித்தபோது கவிஞரானேன்
என்னை ஏமாற்றியபோது ..
கவிதை ஞானியானேன்
-----
பிறக்கும் போது அழுதேன் 
புரியாத காலம் ....!!!

இறக்கும் போது அழுவார்கள் 
தெரியாதகாலம் .....!!!

படிக்கும் போது அழுதேன் 
முடியாத காலம் .....!!!

காதலின் போது அழுகிறேன் 
இன்பக்காலம் ....!!!

காதல் பிரிவின்போது அழுதேன் 
இறந்த காலம் ...!!!
-----
வலியால் துடிக்கிறது இதயம் ...!!!
------------

அழுகிறேன் கதறுகிறேன் ... 
நடக்க போவது ஒன்றுமில்லை ....
தெரிந்தும் அழுகிறேன் ..!!! 

நீ எனக்கு இல்லை ....
உறுதியாக தெரிந்த பிறகும், 
உயிரோடு இருக்கிறேன் ........!!!

உனக்காகவோ 
என்னக்காகவோ அல்ல 
உன்னோடு வாழ்ந்த 
அந்த நினைவுகளுக்காக ........!!!

என் இடது இதய அறையில் ...
பழைய நினைவுகள் ...
என் வலது இதய அறையில் ...
புதிய நினைவுகள் .....
வலியால் துடிக்கிறது இதயம் ...!!!
-----
உன் முடிவை ....!!!
----------
இத்தனை நாட்களாய் .. 
பழகிய நீ ... 

இப்போது என்னை கண்டால் 
முகத்தை திருப்புகிறாய்...? 

தூரக்கண்டவுடன் 
திரும்பி செல்லுகிறாய்..? 

கிட்ட வந்தவுடன் 
முறைத்து பார்க்கிறாய் 

நண்பிகளுடன் செல்லும் 
போது தெரியாதன்வன் 
போல் செல்லுகிறாய் ...?

மறக்க போகிறாயா ? 
மறைக்கபோகிறாயா ...?
எனக்கும் கற்று தா ...
உன் முடிவை ....!!!
----
யாருக்கு விளங்கப்போகிறது ..? 
----------
பள்ளி காலத்தில் .... 
சுற்றுலா சென்றேன் 
கல்வி சுற்றுலாவாம் .....!!!

சுற்றுலா பேரூந்தில் 
ஏறிய நிமிடத்தில் இருந்து 
உன்னை சுற்றிப்பர்ப்பது 
எனக்கு சுற்றுலா..... 
யாருக்கு விளங்கப்போகிறது ..? 

சுற்றுலா முடிந்தது ....
அறிக்கை எழுத சொன்னால் ...
உன்னை பற்றியே எழுதுவேன் ...
மன்னித்துவிடு ....!!!
-----
என்னைப்போல் எந்த நேரமும் 
நிமிர்ந்து நிற்பவன் ...!!!

எனக்கு பிராண வாயுவை 
தந்து வாழவைப்பவன் ...!!!

எனக்காக தினம் 
தோறும் உணவு தருபவன்....!!! 

தன்னையே அழித்து 
ஒளியை தருபவன் ...!!!

பச்சை நிறத்தை 
பார்த்தால் கண்ணுக்கு 
சிறப்பு என்பதற்காக 
வைத்தியனாக இருப்பவன் ....!!!

என் வீட்டு முத்தத்தை 
அழகுபடுத்துபவன்....!!! 

இரவும் பகலும் துங்காமல் 
உழைப்பது இரண்டு....
ஒன்று என் இதயம் 
மற்றையது என் மரம்....!!! 
----
வலிகள் தந்து காயம் செய்கிறாள் ...!!!
------

தினம் தினம் 
கவிதை எழுதுகிறாள்.....
வரிகளால் மனதில் வலிகள் 
தந்து காயம் செய்கிறாள் ...!!!

நான் 
செய்த தவறுக்காக 
தன்னை தண்டிக்கிறாள்
உண்மையை சொன்னாலும் 
ஏற்க மறுக்கிறாள் ....!!!

வலிகள் இருந்தும் 
நேசிக்கிறேன் அவளை ...
அவள் என்னை சந்தேகிப்பதே
என்னை எவரும் காதலித்துவிட 
கூடாது என்று பயப்பிடுகிறாள் ....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,