வலிக்கும் இதயத்தின் கவிதை 31-40

உன் 
பார்வையால் ...
ஜனனம் ஆனேன் .....
வார்த்தையால் ....
மரணமானேன் ....!!!

காதல் 
பார்வையில் ...
பிறந்து ....
வார்த்தையால் ....
இறக்கிறது .......!!!

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
----------
ஒரு நொடியில் ...
மலரும் காதல் தான் ...
ஒரு நொடியில் ...
வாடியும் விடுகிறது ......!!!

வேகப்போகும் என் ....
உடல் படும் வேதனையை ...
ஒத்திகை 
பார்த்துகொண்டிருக்கிறேன்.....
உன் பிரிவின் நொடியில் ...
கணப்பொழுதிலிருந்து....!!! 
+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
--------
உன்னிடம் காதலை ....
பெற்றுகொண்டதோடு ....
பிறருக்கு தெரியாமல் ....
எப்படி அழுவதென்பதையும்....
கற்று கொண்டேன் ....!!!

வளைந்து வளைந்து ...
ஓடாத ஆற்றில் அழகில்லை ....
வலித்து வலித்து ....
வளராத காதலிலும் ....
அழகில்லை .....!!!
+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
---------
எனக்கு ....
காதல் தந்தவளே ....
இன்றும் இருப்பாய் 
இருக்கிறது - நம் காதல் ....!!!

காதல் 
கடைதான் மூடபட்டு ...
இருக்கிறது .....
வெற்றிடமாகவில்லை ...
நம் காதல் ....!!!
+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
------------
மீண்டும் 
என்னை காதலிக்காதே .....
அழுவதற்கு நாதியில்லை ...
கண்ணீரும் இல்லை ...!!!

உன் 
நினைவுகளின் ஈட்டிகள் 
தினமும் இதயத்தை சல்லடை ...
போடுகிறது - அப்போதும் ...
என் இதயம் சிரித்தபடியே ...
துடிக்கிறது ......!!!

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
----------
காதலே உலகம் ....
வாழ்ந்துவிடாதீர் ....
கடலால் சூழப்பட்ட ....
தீவுப்போல் ....
கண்ணீரால் சூழப்பட்ட .....
இதயமாக வாழ்வீர்கள்......!!!

தனிமையில் இருந்து ....
சிந்தித்தேன் காதல் இனித்தது ....
காதலோடு இருந்து சிந்தித்தேன் ...
தனிமை இனிக்கிறது ....!!!

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
--------
இத்தனை நாள் வரையும்....
எத்தனையோ உறவுகள் ...
என்னை தூக்கி எறிந்தபோது ....
இதயம் வலிக்கவில்லை ....!!!

ஒரு நொடியில் என்னை ....
மறுத்துவிட்டாய் தூக்கி ....
எறிந்து விட்டாய் ....
வலிக்கவில்லை இதயம் ....
இறந்துகொண்டிருக்கிறது ....!!!

என்றோ ஒருநாள் .....
என்னை திரும்பி பார்ப்பாய் ....
என் உடல் வலுவிழந்தாலும் ....
நினைவுகள் இறக்காது உயிரே .....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
-------
பசிக்கும் போது ஏதோ....
கிடைப்பெதேல்லாம் ....
வயிற்றுக்குள் போட்டு .....
தணிக்கமுடியும் உயிரே ....!!!

காதல் இதயத்தில் ....
பூக்கிறது உன்னைத்தவிர ...
அதற்குள் யாரையும் ...
திணிக்கமுடியாது .....
உன் பதில் கிடைக்கும்வரை ....
என் இதயம் பட்டினியால் ...
வாடும் மறந்துடாதே ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
---------
உன் மீது காதலை ....
நிறுத்துவதென்றால் ....
வீசும் காற்றை நிறுத்து ....
நானும் நிறுத்துகிறேன் ......!!!

புரிகிறதா ....?
என்னில் காற்று இருக்கும்....
காலம் வரை உன் மீது ...
காதல் இருந்தே தீரும் .....
நீ என்னை பார்த்த ஒவ்வொரு ...
பார்வையும் மாலையாய் ....
கோர்த்துவைதிருகிறேன்....
எந்த மாலையாக்குவாய் ,,,,?

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
---------------
சுலபமாக தந்துவிட்டாய் .....
உன்னிடம் இருந்த என் ....
இதயத்தை ...!!!

என்னிடம் இருக்கும் ....
உன் இதயம் வரமறுக்கிறது ....
உன்னுடன் சேர மறுக்கிறது ....
இதயத்துக்குத்தான் காதலின் ...
வலி புரியும் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

கவிதை 40

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,