வலிக்கும் இதயத்தின் கவிதை 21-30

பகல் கொள்ளை என்பது ...
சரிதான் - இத்தனை ...
கவனமாக இருந்த என் ...
இதயத்தை பட்ட பகலில் ...
எப்படி திருடினாய் ...?

உன் கன்ன குழியில் 
விழுந்து சின்னா பின்னமாகி ...
பித்தம் பிடித்து அலைகிறேன் ...
மீண்டும் உன்னை எப்போது ...
சந்திப்பேன் ...?

+
இதயம் வலிக்கும் கவிதை 
கே இனியவன்
-+----
உனக்கு கவிதை எழுதி ...
உன்னை மயக்க வேண்டும் ...
என்று ஒரு துளி எண்ணமும் ...
எனக்கில்லை ....!!!

ஆனால் ஒன்று மட்டும் ..
உண்மை உன்னில் ...
மயங்கா விட்டால் .....
நிச்சயம் கவிதை வராது ....!!!

+

இதயம் வலிக்கும் கவிதை 
கே இனியவன் 
---------
போதுமடி .....
என் இதயத்தை ....
மிதித்துக்கொண்டு திரிவது ....
எத்தனைமுறை அதுதாங்கும்...
என் இதயம் ஈரமுள்ளத்தால் ....
உன் வலிகளை தாங்கிக்கொண்டு ...
வாழ்கிறது ....!!!

காதல் பிரிவு ஒன்றும் ....
பெரிய வலியில்லை....
என்னை தெரியாததுபோல் ....
நீ நடந்துகொள்வதுதான் ....
காதலில் பெரிய வலி ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
----------
எத்தனை 
கவிதை எழுதினாலும் ...
முடியவில்லை நிறுத்த ...
உலகில் பெரிய தொடர் கதை ....
உன்னை பற்றிய கவிதை ....!!!

ஒரு 
நினைவை மறக்கிறேன்....
மறு நினைவு கவிதையாய் ...
கண்ணீரை நிரப்புகிறது ....
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
---------
என் இதயம் ....
இருட்டறை ஆகிவிட்டது .....
உன் சின்ன சிரிப்பு போதும் ....
இதயம் வெளிச்சம் அடையும் ....!!!

உயிரே ...
எப்படி முடிந்தது உன்னால் ...
இதய தீபத்தை அணைத்து விட ....
போதும் போதும் இதற்குமேல் ...
தாங்காது என் இதயம் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
-----
இலந்தை முள்ளாய் ...
இதயத்தை கிழிக்கிறாள் ....
வடியும் இரத்தத்தில் ...
அவள் முகம் வடிவத்தை ...
அவள் உணரமாட்டாள் .....!!!

என்றோ ஒருநாள் ....
என் வலிகளை - நீ 
உணர்வாய் அன்று புரியும் ....
வலிகளின் வலியின் வதை ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
----
வாழ்வில் ....
இணையாவிட்டாலும் ....
என்னை காதல் செய் ....
கற்பனை வாழ்க்கையாவது ...
கற்கண்டாகட்டும் ....!!!

எல்லோருக்கும் ....
இரவுகள் ஒய்வுதரும் ....
என் இரவுகளோ ....
என்னோடு இணைந்து ....
ஓலமுடுகின்றன.....
அன்பே ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
-----
என் இதயத்தை ....
கையில் எடுத்து காட்ட ...
முடியுமானால் ....
இதயத்தின் காயங்கள் ....
நட்சத்திரத்தையும் ....
விஞ்சிவிடும் .....!!!

என் கண்ணீரை ....
சேமித்திருந்தால் ....
ஆழ் கடலையும் 
விஞ்சியிருக்கும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
----
எனக்கு 
இறந்தகாலம் ....
நிகழ் கால காலம் ....
எதிர்காலம் எல்லாமே ....
நீதான் உயிரே ....!!!

இறந்தகாலம் -நீ 
என்னை காதலித்தது ....
நிகழ்காலம் உன் நினைவோடு ....
நான் வாழ்ந்துகொண்டிருப்பது ....
எதிர்கால உன் கல்லரையோடு ....
நான் உறங்குவது ....!!!

எல்லோருடைய இதயமும் ....
துடிக்கிறது - என் இதயமோ ....
வலிக்குதடி ......!!!

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
----
காதலில் தோற்ற ....
ஒவ்வொரு இதயமும் ....
வலித்துக்கொண்டு ...
துடித்துகொண்டிருக்கும் .....!!!

காதலில்லாத ....
ஒவ்வொரு இதயமும் ...
வலிக்காக ........
துடித்து கொண்டிருக்கும் ....!!!

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05