இனியவனின் கவலை கவிதை 01-10

உயி௫ள்ள வரை மறக்க மாட்டேன்

கண் இல்லாமல்
காதல் வரலாம், கற்பனை 
இல்லாமல் கவிதை வரலாம், 
ஆனால் உண்மையானஅன்பு
இல்லாமல் நட்பு வராது, 
இதயத்தில் இடம் கொடுப்பது 
காதல் இதயத்தையேஇடமாக
கொடுப்பது நட்பு, நான் 
நேசிக்கும்பலர் என்னை 
நேசிக்க மறந்தாலும்,என்னை
நேசிக்கும் உன்னை 
உயி௫ள்ள வரை மறக்க மாட்டேன்
-----
எனக்கு மட்டுமே சொந்தம்


யாருக்கு வேண்டுமானாலும்
உன் உடல் சொந்தமாகலாம்
எந்த நபரும் உன்னால்
வசீகரிக்கபடலாம்

உன் இதழ்களை
யாரேனும் சுவைக்கலாம்
ஆனால் உன் இதயத்தை
தொட்டவன் நான் மட்டுமே.
-----
கிரிக்கட் காதல்


நானும் நீயும் ..
அப்பபோது முரண் பட்டாலும்
எமக்குள் உறவுதான் இருந்தது

மூன்றாம் நபர் குறுக்கிட்டதால்
அவுட்டாகி விட்டோம்
கிரிக்கட்டை போல
-----
அதிஸ்டம் இல்லாத
--
அதிஸ்டம் இல்லாத ஒருவன்
அதிஸ்ட லாப சீட்டு விற்கிறான்
-----
உண்மைதான்


கண்ணாடிக்கு 
எதிர் விம்பம் இருக்கிறது
என்பது உண்மைதான்
கண்ணாடி முன் நான் நின்றால்
நீ தெரிகிறாய்
----
இதய மயானம்


காதலில் தோல்வி கண்ட
ஒவ்வொரு இதயமும் மயானம் தான்
சோகம் மட்டுமே சொத்துக்களாக இருக்கும்
இறந்தவர்கள் திரும்பி வருவதில்லை
----
வாடினால்
----
மரம் வாடினால்
தண்ணீர் விடலாம்.
மனம் வாடினால்
கண்ணீர் விடலாம் ...!!!
----
இன்னும் இறக்கவில்லை ...
-----
நான் விஷம் குடித்து
பலவருடமாகியும் இன்னும்
முழுதாய் இறக்கவில்லை
உன் நினைவால் 
காதல் ஒரு உயிர் கொள்ளி ...!!!
----
என் தொலைபேசி காதலி
------------

காற்றுக்கு தான்.....
நன்றி கூறுகிறேன்....
தினம் உன்குரல்...
சேர்ப்பதால் .....
தொலைவில் - நீ 
தொலைபேசியிலும் -நீ 
இன்ப தொல்லையும் -நீ
-----
நீ மட்டும்
-----
செடி, கொடி, மரம், ஆகாயம், பூமி
அனைத்தையும் விட நீ மட்டும்
ஏன் அழகாய் தெரிகிறாய்....
இறைவனுக்கும் நடுநிலைமை ....
காணப்படவில்லை .....
உன் படைப்பில் பக்கம் சார்ந்து ....
படைத்துவிட்டான் ....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05