கவிதையால் காதல் செய்கிறேன் 01-10

ஏய் வான தேவதைகளே ....
மறைந்து விடுங்கள் ....
என் தேவதை வருகிறாள் .....!!!

ஏய் விண் மீன்களே .....
நீங்கள் கண்சிமிட்டுவதை ....
நிறுத்தி விடுங்கள் ....
என் கண் அழகி வருகிறாள் ....!!!

ஏய் வண்ணாத்தி பூச்சிகளே ....
வர்ண ஜாலம் காட்டுவதை ....
நிறுத்திவிடுங்கள் .....
என் வண்ண சுவர்னகை வருகிறாள் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 
----
என்னவள் ....
ஒவ்வொருமுறையும் ....
மூச்சு விடும்போதும் ...
மூச்சு காற்று தென்றலாய் ....
என் மேனியை தழுவுகிறது ....!!!

உயிரே ....
பயப்பிடாமல் என்னை ...
காதலி என்னிடம் எந்த ...
கெட்ட பழக்கமும் இல்லை ...
காதலை தவிர வேறு எதுவும் ....
என்னிடம் இல்லை ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 
கவிப்புயல் இனியவன்
***
என்னவளை எப்போது ....
பார்க்கபோகிறேனோ....?
என்னவள் எப்போது என்னை ....
காதலிக்கிறாளோ ....?
அன்று என் மறு பிறப்பு .....!!!

ஒரே ஒரு சின்ன ஆசை .....
என் உயிர் இருக்கும் காலத்தில் ....
என்னவளை காதலிக்காவிட்டாலும் ....
ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் .....
என்னவளின் காந்த கண்கள் ...
என்மீது பட்டு தெரிக்கவேண்டும் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 03
கவிப்புயல் இனியவன்
-----
என்னிடம் அழகில்லை ....
ஏதோ ஒருவழியால்....
ஆரோக்கியமாய் இருக்கிறேன் .....
ஆனால் என்னிடம் இருக்கும் ....
காதல் இந்த உலகில்- நீ
யாரிடமும் பார்க்கமுடியாது ....!!!

நான் 
பிறந்ததுக்கு தகுதியாவன் .....
எப்போது எனில் -நீ என்னை ...
காதலிக்கும் போதுதான் ....
உன்னிடமும் காதல் உண்டு .....
என்னைவிட நீ காதலில் அழகு ....
வா உயிரே புதியதோர் காதல் ...
செய்வோம் ......!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 04
கவிப்புயல் இனியவன்
-----
யார் ....
மனதில் யாரோ ...?
நிச்சயம் சொல்வேன் ....
என் மனதில் உன்னை ...
தவிர யாரும் இல்லை .....
உன் காதலை தவிர ....
வேறெதுவும் எனக்கு ...
வேண்டாம் .....!!!

திருமணம் நடக்காமல் ....
நான் இறக்க தயார் ....
உன்னை காதலிக்காமல் ....
நான் இறக்க தயாரில்லை ...
என் மூச்சு உன் பேச்சு ...!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 05
கவிப்புயல் இனியவன்
-----
உயிரே உனக்கு ....
என்ன நடந்தது ....?
பிரபஞ்ச்சத்தில் ....
சிலநிமிடம் காற்றே ....
வீசவில்லை .....?
அப்போ நீ மூச்சு ....
விடவில்லை என்றுதானே ...
அர்த்தம் .....!!!

உயிரே உன் காதலை ....
சொல்லமுன் என்னை விட்டு ....
பிரிந்து விடாதே .....
என்னிடம் காற்றே இராது .....
நீ இல்லாத போது ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 06
கவிப்புயல் இனியவன்
----
சற்று முன் வீதியில் ....
உன்னைப்போல் ஒருத்தி ....
சென்றிருப்பாளோ ...?
என்று சந்தேகப்பட்டேன் ....
இருக்காது இருக்காது ....
என்னை நீ பார்க்காமல் ....
போயிருக்க மாட்டாய் ....!!!

எப்போது உயிரே -நீ 
திருடியாவாய் -என் 
இதயம் ஏங்கிய படியே ....
காத்திருகிறது ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 07
கவிப்புயல் இனியவன்
----
இந்த நிமிடம் வரை ....
உனக்கே தெரியாமல் ....
உன்னை காதலிக்கிறேன் ....
என்றோ ஒருநாள் நிச்சயம் ....
காதலிப்பாய் .....!!!

சூரியனின் ஒளியில் ....
பூக்கள் மகிழும் .....
என் சூரியனும் -நீ 
சந்திரனும் -நீ 
இரவு பகல் எல்லாம் - நீ 

+
கவிதையால் காதல் செய்கிறேன் 08
கவிப்புயல் இனியவன்
---
நான் மருத்துவனாக ....
மாற ஆசைப்படுகிறேன் ....
இதயத்துக்குள் உன்னை ....
எப்படி அடைப்பது என்று .....
கண்டறிய போகிறேன்....!!!

எனக்கு எந்த பூவையும் ....
பிடிக்கவில்லை ....
உன்னை காணும்வரை ....
எதையும் விரும்ப போவதில்லை ....
எதை விரும்பினாலும் -உன் 
மீதிருக்கும் காதல் குறைந்து ....
விடுமோ என்ற பயம் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 09
கவிப்புயல் இனியவன்
-----
ஆசையை குறை குறை .....
என்கிறார் என் குருஜி ....
குறைத்து கொள்ளப்போகிறேன் ....
உன் மீது இருக்கும் ஆசையை ...
குறைத்து பேராசைப்படபோகிறேன்....!!!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ....
சொன்னது உண்மைதான் .....
உன்னை நான் கண்டதில்லை ....
என் அகத்தில் இருக்கும் உன்னை ...
நினைத்துதானே காதல் செய்கிறேன் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 10
கவிப்புயல் இனியவன்
----

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,