திருக்குறள் வசனக்கவிதை 05

என் 
கண்ணில் பட்டவளே.....!!!

நீ 
பிரம்மனின் ....
தங்க தேவதையா ....?
தெய்வீக தேவதையா ...?
தோகை மயில் அழகியா ...?
மானிட பெண் தாரகையா ...?
என்னை கொல்லும்
யார் நீ ...?

+++

குறள் - 1081

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.
----
நான் 
நோக்கிய போது ..
நீயும் நோக்கினாய் ....
செத்தேனடி நான் ....!
உன் கண் ...
அணுமின் கதிர் .....
ஒரு நாட்டின் சேனை ...
இரண்டாலும் கொன்று ...
விட்டாயே என்னை ....!!!

+++

குறள் - 1082

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
----
என்னை கொல்வதற்கு 
யமனும் வரத்தேவையில்லை ...
பாசக்கயிறும் தேவையில்லை ....
உன் பார்வையே போதும் ...
இறந்து விடுவேன் ....!!!

+++
குறள் - 1083

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.
----
பேரழகி நீ 
உன் பார்வையோ ...
உயிரையே வதைக்கும் ....!
உன் அறிவையும் 
அழகையும் தாண்டி ...
வதைக்கிறது என்னை ...!!!
+
குறள் - 1084
+
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
++++++
சொல் நீ யார் ...?
உயிரை எடுக்கும் யமனா ...?
மாய மானா ...?
உடலில் படரும் தாமரை ...
கொடியா ...?
எல்லாம் கலந்த கலவையா ...?
+
குறள் - 1085
+
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
+
திருக்குறள் வசனக்கவிதை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,