வலிக்கும் இதயத்தின் கவிதை 91-100

கண்ணில் 
பட்டு காதல் ....
தந்தவளே .....
கண்ணீரோடு இருக்க ....
காதல் வேண்டாம் ...
கண்ணாய் இருக்க ...
காதல் செய் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
-----
உன் பாத சுவடுகளை ...
பூக்களாய் வர்ணித்தேன் ....
அதை அள்ளி முகர்ந்தேன் ....
அத்தனையும் கனவானது ....
ஒற்றை வார்த்தையால் ...!!!

நீ 
நடந்து சென்ற பாதையில் ....
பாதத்தை பதிந்து பார்கிறேன் ....
முற்களாய் குத்துகின்றன .....
வார்த்தை இதயத்தை தைத்தது ...
நினைவுகள் உணர்வுகளை ....
தைக்கிறது ......!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
-----
பூக்களை பறிக்காதே ..
பறித்தால் சூடாதே 
சூடினால் வாட விடாதே ...
வாடினான் எறிந்து விடாதே ...
எறிந்த மலரைப் போல் 
என்னை மறந்துவிடாதே....

உன் நினைவுகளில்
உயிர் இல்லை
ஆனால்,
நான் உயிர் வாழ
காரணம்
உன் நினைவுகள் தான்...!!!

என்னை தூக்கி நீ எறிந்தாலும் ..
எறிந்த அந்த நினைவுகளுடன் ..
வாழ்வேன் சாகும் வரை...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
-----
காதலும் வலியில்லை...
தோல்வியும் வலியில்லை ....
காதல் செய்வதுபோல் ....
பாசாங்கு செய்வதே வலி ...!!!

செய் 
அல்லது செத்து மடி ....
என்பதுபோல் - நீயும் 
காதல் செய் அல்லது ...
காதலை விடு ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
----
நீ 
காதல் செய் - இல்லையேல் ....
காதல் செய்யாமல் விடு ...
அது உன் சுதந்திரம் ....!!!

என்னை காதல் செய்ய ...
வேண்டாம் என்று தடுக்காதே .....
அது என் சுதந்திரம் ....!!!

வாழ்க்கை என்றால் தான் ....
என்றோ ஒருநாள் என்னை ...
புரிவாய் அதுவரை -நான் 
உன்னை காதலிப்பேன் .....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
-----
உனக்கு 
என்னை பிடித்திருகிறது....
எனக்கு நன்றாக புரிகிறது ....
காதலை தடுக்கும் ....
காதல் சுவரை உடைத்தெறி ....!!!

வாழ்க்கை ஒரு போராட்டம்.... 
காதல் கடும் போராட்டம் ....
காதலின் தடைகளை..... 
தகர்த்துவிடு ....
காதலோடு வாழ்ந்துவிடு ...!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
-----
ஒவ்வொரு காதலனும் ....
முத்தமுட முன்னர் ...
விரும்புவது ....
காதலியின் தோளில்...
சாய்வதற்கே ....
ஏன் என்று 
கேட்டுப்பாருங்கள் ....
யாராலும் காரணம் ....
சொல்லிவிட முடியாது ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
-------
என்னை உனக்கு ....
பிடிக்கவில்லையென்றால் ...
உண்மையாக என்னை ....
வெறுத்துவிடு ....!!!

பிடிக்கததுபோல் ...
நடிக்காதே - அது ....
என்னை கொஞ்சம் ...
கொஞ்சமாய் கொல்கிறது....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
-------
வேண்டாமடி ...
என்னை காதலித்து விடாதே ....
நான் படும் அவஸ்தையை ....
நீயும் படாதே ....!!!

இதயத்தின் காயங்கள் 
உள்ளேயே இருப்பதால் ....
வெளியே தோன்றும் ....
அழகில் மயங்கி விடாதே ...!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05