ஒரு நிமிட உலகம் 06
ஆறாம் அறிவு இதுதானா ...? --- ஆறறிவை பெற்ற மனிதன் .... ஆடையால் மானத்தை காக்கிறான் .... ஆடையே போடாத மிருகத்திடம் .... ஆறறிவு மனிதனிடம் இல்லாத .... அற்புத பண்பு இருக்கிறதே -அவை ... கற்பழிப்பில் ஈடுபடுவதில்லை ....!!! மேலாடையாய் தம் தோலை .... மறைத்து மானத்தை காக்கும் .... மிருகங்களின் தோலை மனிதன் .... மேலாடையாய் போடுகிறான் .... இருந்துமென்னபயன்...? மேலான சிந்தனைகள் இல்லையே .... பகுத்தறிவு என்ற ஆறாம் அறிவை ... மனிதனுக்கு பறித்துண்ணத்தான் ... கொடுத்தானோ ....? ^^^ ஒரு நிமிட உலகம் ...............வாழ்வியல் கவிதை **ஆறாம் அறிவு இதுதானா ...? ** + கவி நாட்டியரசர் கே இனியவன்