உண்மையின் மறுபக்கம் பார்க்கிறேன் - 03
உண்மை அநாதையானது ....!!! .......................உண்மையின் மறுபக்கம் பார்க்கிறேன் - 03 ^^^ குற்றவாளி கூண்டில் ..... குற்றம் சாட்டப்பட்டு ஒருவன் ..... கூண்டில் நிற்கிறான் .... சட்டவாதிகள் குற்றத்தின் மேல் .... குற்றம் சாட்டி குற்றமற்றவனை ..... குற்றவாளியாக்க முயற்சித்தனர் ....!!! பார்வையாளராக இருந்த .... உண்மைக்கு கோபம் வரவே ..... சட்டென்று எழுந்து - இவை ... அனைத்தும் பொய் . எனக்கு .... எல்லா உண்மையும் தெரியும் .... என்று உரத்த குரலில் சொன்னது .....!!! அதிர்ச்சியடைந்த நீதிபதி .... மன்றத்தின் அமைதியை கெடுதீர் ... குற்றம் சுமத்தி -உண்மையை ... மன்றத்திலிருந்து வெளியேற்றினார் ....!!! உண்மை .... வேலையில்லாமல் அலைந்தது .... பட்டதாரியாகவும் இருந்தது ...... சிறு வேலையென்றாலும் கிடைக்டும்.... தோட்ட முதலாளியிடம் வேலை கேட்டது .... என்ன படிதிருகிறாய் நீ ....? பட்டதாரி என்றது -உண்மை .... உனக்கு வேலை கிடையாது போ .... எதற்கு என்று வினாவியது உண்மை ...? இங்கே படிக்காதவர்களே வேலை செய்கிறார்கள் .... நீ அவர்களையும் கெடுத்துவிடுவாய் ...... தொழிற்சங்கம் அமைப்பாய் -போராடுவாய்.... சம்பளம் கூட்டி கேட்பாய் ...