இடுகைகள்

மே 30, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு வழிப்போக்கனின் கவிதை

தெருவோரத்தில் உச்சி வெய்யிலில் ..... வாய்க்கு வந்தததை உளறியபடி ...... சென்ற வழிப்போக்கன் ஓரத்தில் .... இருந்த "அரசடிப்பிள்ளையாரை".... வாயில் வந்ததையேல்லாம் ..... தொகுத்து கவிதையாக்கினான் .....!!! & பார்க்கும் இடமெல்லாம் ..... இருக்கும் தெருவெல்லாம் ...... ஆற்றங்கரையெல்லாம்  ....... வீற்றிருக்கும் பிள்ளையாரே ...... என்போன்ற வழிப்போக்கனுக்கு ..... பக்தியை அள்ளிவழங்க உம்மை .... விட்டால் யார் உள்ளனரோ .....? மிருகம் பாதி மனிதன் பாதி .... கலந்திருக்கும் கடவுள் நீர் ....... அதனால் தானோ எல்லா .... உயிரினங்களும் உம்மில் ...... இத்தனை அன்போ .....? உம் வயிறும் நிரம்ம போவதில்லை ..... என் போன்ற வழிப்போக்கனின் ..... வயிறும் நிரம்ம போவத்தில்லை ..... பணம் படைத்தவன் வயிறும் .... மனமும் நன்றாக நிரம்புகிறது ..... அவர்கள் பார்த்து நமக்கு .... படைத்தால் தான் நம் வயிறு ...... நிரம்ப முடியும் ..........!!! அதுசரி உமக்கும் புத்தனுக்கும் ..... அப்படியென்ன அரசமரத்தில் .... காதல் - எங்கெல்லாம் அரசு முளைக்கிறதோ அங்கெல்லாம் .... இருவரும் அரசை பிடிப்பதுபோல் .... அர