இடுகைகள்

மார்ச், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நண்பா கடந்த காலத்தை

நண்பா கடந்த காலத்தை ----------------------------------------- வாடா நண்பா கடந்த காலத்தை நகைச்சுவையுடன் பேசுவோம் ...!!! சின்ன வயதில் சிறு பொந்தில் கிளிதேடி கட்டெறும்பிடம் கடிவாங்கியத்தை போசுவோம் வாடா ...!!! கள்ள மாங்காய் பிடுங்க போய் -தோட்டக்காரன் வந்தவுடன் தலைதெறிக்க நான் ஓட -மரத்தில் நின்று அழுததை.... பேசுவோம் வாடா ...!!! கிட்டி புள் விளையாடுகையில் பாட்டியின் தலையில் பட திட்டிய வார்த்தைகளை இன்று பேசிப்பார்ப்போம் வாடா நண்பா வாடா ....!!! ஓடி விளையாடுகையில் உன் காற்சட்டை உன்னை அறியாது கழண்டுவிழ வெட்கத்தோடு காற்சட்டையை விட்டு கண்ணை பொத்தினாயே வாடா நண்பா நகைசுவையாக பேசுவோம் வாடா ....!!! & கவிப்புயல் இனியவன்

நண்பா கடந்த காலத்தை

நண்பா கடந்த காலத்தை வாடா நண்பா கடந்த காலத்தை நகைச்சுவையுடன் பேசுவோம் ...!!! சின்ன வயதில் சிறு பொந்தில் கிளிதேடி கட்டெறும்பிடம் கடிவாங்கியத்தை போசுவோம் வாடா  ...!!! கள்ள மாங்காய் பிடுங்க போய் -தோட்டக்காரன் வந்தவுடன் தலைதெறிக்க நான் ஓட -மரத்தில் நின்று அழுததை.... பேசுவோம் வாடா  ...!!! கிட்டி புள் விளையாடுகையில் பாட்டியின் தலையில் பட திட்டிய வார்த்தைகளை இன்று பேசிப்பார்ப்போம் வாடா நண்பா வாடா ....!!! ஓடி விளையாடுகையில் உன் காற்சட்டை உன்னை அறியாது கழண்டுவிழ வெட்கத்தோடு காற்சட்டையை விட்டு கண்ணை பொத்தினாயே வாடா நண்பா நகைசுவையாக பேசுவோம் வாடா ....!!!   கவிப்புயல் இனியவன்

மறுபடியும் மகனாய் பிறக்க வேண்டும்

மறுபடியும் மகனாய் பிறக்க வேண்டும் --------------------------------------------------------- அம்மா. உன்னை நினைக்கும் போது எனக்குள் எல்லா நரம்பும் இரத்தத்தை கடத்தவில்லை - உன் உருவத்தையே இரத்தமாய் கடத்துகிறது ....!!! பிள்ளை பருவத்தில் செல்ல காயம் வந்தால் கூட விளையாட்டுக் காயங்கலாக எடுக்காமல் -உன் கண்ணுக்கு திரியை வைத்து விடிய விடிய விளக்காய் எரிவாயே தாயே ....!!! சிறு வயதில் எல்லோருக்கும் பசியதிகம் -பள்ளி விட்டு வந்து படாத பாடு படுத்திவிடுவேன் உன் காலை உணவை எனக்காக வைத்திடுந்து நீ பட்டினீயிருப்பாய் தாயே ......!!! என் புத்தகச் சுமை உன் வலது தோலில் சுமப்பாய் ... செருப்பில்லாத பாதங்களேடு.... இடுப்பில் என்னைசுமந்திருக்கிறாய். வீடு வந்தவுடம் களைத்து விட்டாய் மகனே என்று -உன் களைப்பை பொருட்படுத்தாத அதிசயப்பிறப்பு தாயே .....!!! அ - வரிசையில் சொற்கள் சொல்லடா அம்மா என்பேன் -உலகிலேயே அப்படி சொன்ன முதல் பிள்ளை என்பது போல் இனிமேல் யாரும் சொல்ல மாட்டார்கள

என்னவனே என் கள்வனே 10

என் இதய வீட்டுக்கு...... எப்போது குடிவர போகிறாய்....? எண்ணத்தால் தினமும் கோலம்.... வண்ண வண்ணமாய் போடுகிறேன்..... தினமும் என் ஏக்க மூச்சு..... அழித்து கொண்டே போகிறது......!!! கோலங்கள் மாறுகின்றன...... உன் கோலம் ஏன் மாறவில்லை........ இறைவா இவன் காணும்...... கனவை நிஜமாக்கி என்னை...... காதலிக்க வைத்துவிடு............!!! ^^^ என்னவனே என் கள்வனே 10 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

என்னவனே என் கள்வனே 09

என் ...................... இதய ஊஞ்சலை...... ஆடவைத்துவிட்டு அதில்.... ஏறமாட்டேன் என்று  ஏன் ...... அடம்பிடிகிறாய்........? எத்தனை காலம் தான்..... வெறும் ஊஞ்சலாடும்.....? சுற்றும் பம்பரத்துக்கு கூட..... ஓய்வுண்டு என் இதயத்தை...... பம்பரமாய் சுற்றிவிட்டு....... பார்த்து கொண்டே இருகிறாய்........!!! ^^^ என்னவனே என் கள்வனே 09 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

என்னவனே என் கள்வனே 08

ஆகாய எரிகல்...... கண்ணில் விழுந்தால்..... அடுத்த நாள் அதே நேரம்.... வரைக்கும் கண்ணில்..... இருந்து வலிதருமாம்.....!!! ஆகாய எரிகல்லாய்..... வந்துவிடு என்னவனே...... அப்போதாவது கண்ணுக்குள்..... இருந்துகொண்டிருப்பாயே.....!!! பாறையில் இருந்து கூழாங்கல்..... உடைப்பதுபோல் உன் கல் நெஞ்சு..... இதயத்தை உடைக்கிறேன்......!!! ^^^ என்னவனே என் கள்வனே 08 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

தோல்வியை ரசி வெற்றியை ருசி

முயற்சி மனிதனின்..... மூலவேர் -அதை....... விருட்ஷமாக்குவது........ பயிற்சி.......................!!! பயிற்சி போதாதெனின்...... தோல்வியென்னும்............ கிளை தோன்றும்.................. முயற்சி  தோற்பதில்லை.......!!! வெற்றியின் போது........ ஓரக்கண்ணில் வருவது........ ஆனந்த கண்ணீரல்ல.......... தோல்வி தந்த வெள்ளை நிற....... இரத்தம்...................!!! & தோல்வியை ரசி வெற்றியை ருசி கவிப்புயல் இனியவன்

ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 02

நட்புக்கு வசந்த காலம்...... மழைக்காலம் தானே...... வேண்டுமென்றே நனைவதும்...... சேற்றுக்குள் உருளுவதும்...... வீட்டுக்கு வந்து அடிவாங்குவதும்..... மழைகாலம் வசந்த காலந்தானே.....!!! வடிந்தோடும் வெள்ளதில்....... பாய்ந்தோடும் காகித கப்பல்...... அப்போதுதான் படித்த குறிப்பு...... சற்றும் தாமதிக்காமல்....... கிழித்து விடும் காகித கப்பல்....... அடுத்த நாள் இருவருக்கும்..... கிழிந்த கால்சட்டைமேல்..... விழும் செமபூசை..........................!!! வாற்பேத்தையை மீன் குஞ்சென..... ஓடியோடி பிடித்து வீட்டுக்கு..... கொண்டுவருவதும் வந்த கையோடு...... அம்மா பறித்தெறிவதும்.......... கடுப்போடு கத்தி பிரழுவதும்...... இன்றுவரை நினைவில் இருக்கும்.... வசந்த காலம்...............................!!! & ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 02 கவிப்புயல் இனியவன்

ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு

படம்
ஆறுவயதில் அயல் வீட்டில் - நீ பாதிவயிறு உன் வீட்டில் நிரம்பும்.... பாதி வயிறு என் வீட்டில் நிரம்பும்...... பாதி தூக்கம் உன் வீட்டில் - நான் மீதி தூக்கம் என் வீட்டில் - நீ .........!!! அப்பப்போ சண்டை....... தடியெடுத்து அடிகும் மனதைரியம்..... எனக்கும் இல்லை உனக்கும் இல்லை..... ஒரு பிடி மண்ணால் சண்டையோடும்.... மாவீரர் நாம்...........................!!! சற்று நேரம் கூட ஆகாது......... வீட்டில் கிடைத்த இனிப்போடு....... ஓடிவருவேன் உன் வீட்டுக்கு.......... பாதி கடித்த இனிப்பை....... உன்னிடம் தர பறந்து போகும்..... சண்டையின் பகை...................... நட்பென்பது எப்போதும் இனிமை.....!!! & ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு கவிப்புயல் இனியவன்