இடுகைகள்

மார்ச் 12, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அதிசயக்குழந்தை - முதுமை

அதிசயக்குழந்தை - முதுமை ---------- பக்கத்து வீட்டில் தாத்தா .... பேரனை திட்டியபடி இருந்தார் .... தனது அனுபவத்தையெல்லாம் .... அறிவுரையாக கொட்டி கொண்டிருந்தார் ..... பேரனோ காதில் விழுத்தாமல் .... எங்கேயோ பார்த்துகொண்டிருந்தான் ... கோபமடைந்த தாத்தா அடிக்க கை .... ஓங்கினார்................................................. அப்போது அதிசய குழந்தை ....!!! தாத்தா நிறுத்துங்க...  நிறுத்துங்க .... உங்களுக்கு அறிவுரை செய்ய ... நான் பெரும் அறிவானவன் இல்லை ... என்றாலும் கூறதொடங்கினான்.....!!! முதுமையில் எல்லோரும் -தம் .... அனுபவத்தை அறிவாக நினைத்து .... அறிவுரை சொல்கிறார்கள் -தப்பு ... அனுபவம் வேறு அறிவு வேறு .....! உங்களது அனுபவம் மற்றவனுக்கு .... தேவைப்படாது ,பொருத்தமற்றது .... முதுமையில் அதை நீங்கள் பிறர் .... மீது திணிக்கிறீர்கள் தப்பு தாத்தா ...!!! வயது கூடியவர்கள் அறிவாளிகள் .... வயது குறைந்தவர்கள் அறிவற்றவர்கள் .... நாங்களே அனுபவசாலிகள் ... உங்களுக்கு அனுபவம் போதாது .... என்றெல்லாம் முதியோர் நினைப்பது .... தப்பு தாத்தா தப்பு .....!!! முதுமையின் ஒத்தகருத்து ப

அதிசயக்குழந்தை -வறுமை

அதிசயக்குழந்தை -வறுமை  ******* வீதியில்  நின்ற வறிய வயோதிபர்.... வீதியில் வந்த பணக்காரனை ....  உதவி கேட்டார் - அவர் பணம் .... கொடுக்கவில்லை - கோபமடைந்த ... வயோதிபர் வாய்க்கு வந்தபடி .... திட்டினார் ....!!! இதை  அவதானித்த அதிசய குழந்தை ..... வயோதிபரிடம் என்ன தாத்தா ... என்று ஆரம்பித்ததும் .... அவர் மேலும் திட்டினார் .........!!! பணம்  படைத்தவர்கள் தீயவர்கள் ..... கயவர்கள் கள்வர் இரக்கம்... அற்றவர்கள் நயவஞ்சகர்கள் .... திட்டிக்கொண்டே போனார் .... நிலை குலைந்த தாத்தாவுடன் .... பேசி பயனில்லை என்றறிந்த .... அதிசயக்குழந்தை விலகியது .....!!! என்ன குழந்தாய் அதிகம் ... ஜோசிக்கிறாய் என்று கேட்டேன்....? ஆசானே ..... வறுமை என்பது ஒரு நோய் ..... நோய்க்கு நாம் மருந்தெடுத்து .... மாற்றுகிறோமோ அதுபோல் ... வறுமையையும் நாம் மாற்றலாம் .... வறுமையோடு வாழ்பவன் நோயோடு .... இறந்து விடக்கூடாது என்கிறேன் ....!!! வறுமைக்கு காரணம் பணம் .... படைத்தவர்கள் மோசமானவர்கள் ... என்ற மன விரக்தியும் தாமும் .... பணம் படித்தால் அவ்வாறே மாறி .... விடுவோம் என்ற மனப்பயமுமே .... ஒருவன் மீது வறுமை தொடரகாரணம் .... வறுமையை நீக்கண

அதிசயக்குழந்தை - எண்ணம்

அதிசயக்குழந்தை - எண்ணம் ------------ எண்ணும் எழுத்தும் .... கண்ணெனத்தகும் ....!!! அதிசய குழந்தை  வாய்க்குள் உச்சரித்து ... கொண்டிருந்தான் ...!!! என்னடா  புது பழமொழியோ ...? இல்லை ஆசானே .... எதுவுமே புதியது இல்லை .... எல்லாமே முன்னோர் சொன்ன .... பொதுமை மொழிகள் .... அதிலிருந்தே இனிமேல் ... எல்லோரும் எடுக்க வேண்டும் .... இது எனது இது நான் சொன்னது .... என்று யாரும் உரிமை .... கொண்டாடுவதில் பயனில்லை ...!!! எண்ணமே ஒருவனின் உருவம் .... எண்ணமே ஒருவனின் வாழ்க்கை.... எண்ணமே ஒருவனின்முடிவும் .... அடுத்து சொன்னான் குழந்தை ...... சொர்க்கமும் நகரமும் .... ஒருவனுடைய எண்ணமே ..... துயில் எழும்பும் போது .... நல்ல சிந்தனையுடன் எழுபவன் .... அன்று முழுதும் சொர்க்கத்தில் .... வாழ்கிறான் ......!!! நேற்றைய பகையை ... முன்னைய இழப்பை .... பொறாமையை துயில் .... எழும்போது நினைப்பவன் அன்று முழுதும் நரகத்தில் .... வாழ்கிறான் ......!!! குப்பத்தில் இருப்பவனை ... கோபுரத்துக்கும் ,கோபுரத்தில் ... இருப்பவனை குப்பத்துக்கும் .... மாற்றுவது தலையெழுத்தல்ல .... அவரவர் எண்ணமே எண்ணமே....!!! ^ அதிசயக்குழந்தை  வசனக்கவிதை  கவிப்புய

அதிசயக்குழந்தை -எழுத்து

அதிசயக்குழந்தை -எழுத்து  ---------------- அழகான வர்ணம் பூசிய ..... ஒரு வீட்டின் வெளிப்புற .... சுவரில் அதியக்குழந்தை.... கிறுக்கி விளையாடி.... கொண்டிருந்தான்.......!!! டேய்  சுவரை அசிங்க படுத்தாதே.... என்று கொஞ்சம் கோபத்தோடு ... ஆசான் என்ற போர்வையில் .... அவனை அதட்டினேன் ....!!! சிரித்த படியே ..... சொன்னான் - ஆசானே .... நீங்கள் தானே சுவர் இருந்தால் ..... சித்திரம் வரையலாம் என்றீர்கள் .... நான் அதைதானே செய்கிறேன் ...!!! குழந்தாய் ... அந்த சுவர் என்றது .... உடம்பை குறிக்குமடா.... ஆரோக்கியம் இருந்தாலே .... சாதிக்கலாம் என்பதாகும் .....!!! ஆசானே .... உடம்பும் ஒரு கலவைதானே .... அது இருக்கட்டும் ஆசானே .... உணர்வுகளின் ஓசை மொழி .... ஓசையின் பரிமாணம் பாஷை.... பாசையின் அலங்காக வடிவம் .... எழுத்து - எழுத்தின் " கரு" கிறுக்கல் ... அதேயே செய்தேன் ஆசானே .... கிறுக்கியது தவறு இல்லை .... உங்களுக்கு புதிய சுவர் ... என்பதுதானே கவலை .... மெல்ல சிரித்தபடி நகர்ந்தான்...!!! ^ அதிசயக்குழந்தை  வசனக்கவிதை  கவிப்புயல் இனியவன் தொடர் - 08

அதிசயக்குழந்தை - வீடு

அதிசயக்குழந்தை - வீடு  ------ எப்போதுமே .... தெருகில் நிற்கிறாயே .... உனக்கு வீடே இல்லையா ...? குழந்தாய் ...? எனக்கு சிறையில் ... இருப்பது பிடிக்காது ... என்றான் சட்டென்று ...!!! வீட்டையேன் ... சிறை என்கிறாய் ...? அது பாதுகாப்பான ... இடமல்லவா ....? இருள் மழை காற்று ... மின்னல் வெயில் .... எல்லாவற்றிலும் இருந்து .... பாதுகாக்கிறதே..... அது எப்படி சிறை ....? ஆசானே .... வாழ்நாள் முழுதும் ... இருள் மழை காற்று ... மின்னல் வெயில் .... எல்லாவற்றிலும் பேராடி ... வாழும் மிருகத்துக்கு ... எங்கே வீடு ....? குழந்தாய் .... அவை இவற்றிலிருந்து .... வாழ்வதற்கான திறனில் ... படைக்கப்பட்டுள்ளன .... அவற்றுக்கு வீடு ...... தேவையில்லை ...!!! அப்போ பலவீனமாக .... படைக்கப்பட்ட மனிதனுக்கே ... வீடு தேவைப்படுகிறது .... அப்படிதானே ஆசானே ...? பலவீனமாய் படைக்கபட்ட ... மனிதனே இயற்கையை .... அழித்தும் வாழ்கிறான் .... எல்லா விடயத்திலும் ... இருந்து வெளியில் வாருங்கள் .... ஆசானே சுதந்திரமாய் .... வாழ்வோம் .....!!! ^ அதிசயக்குழந்தை  வசனக்கவிதை  கவிப்புயல் இனியவன் தொடர் - 07

அதிசயக்குழந்தை - கை

அதிசயக்குழந்தை - கை ---- கை தட்டி ஆரவாரமாக .... இருந்தான் அதிசயக்குழந்தை..... என்ன அத்துணை மகிழ்ச்சியோ ....? ஆசான் அதிகாரத்தில் கேட்டேன் ....!!! எனக்கு .... கை கூப்புவது பிடிக்காது ....... கை தட்டுவதே பிடிக்கும் என்றான் .... கை தட்டி பாருங்கள் -ஓசை மட்டும் .... வருவதில்லை .ஓயஷ்சும் (காந்த சக்தி ) கிடைக்கும் என்றான் .....!!! எல்லா மனித நரம்புகளும் .... கையுடன் தொடர்புபடும் .... கை தட்டினால் அனைத்து .... மன அழுத்தமும் பறந்துவிடும் .... தனித்து நின்று கை தட்டினால் .... பித்தன் என்கிறார்கள் ..... கூட்டத்தோடு தட்டினால் ... " பிரார்த்தனை" என்கிறார்கள் ....!!! இன்னும் ஒன்றை கேளுங்கள்....!!! கைகளை கொண்டு .... போராடுங்கள் என்றது  மாக்சிஷம்....! கைகளை ஆயுதமாக்கியது ..... பாசிஷம்.......! இருகோட்பாடும் தோற்றுவிட்டது...  முதலாளிதுவத்திடம் .....!!! இங்கு அலங்கார ஆடையுடன் .... கை கூப்பியவன் ,கை குலுக்கியவன் .... உலகினிலே நிமிர்த்து நிற்கிறான்  ..... எனக்கு கை கூப்பும் கொள்கை .... பிடிக்காது ..............!!! ^ அதிசயக்குழந்தை  வசனக்கவிதை  கவிப்புயல் இனியவன் தொடர் - 06

அதிசயக்குழந்தை - பெயர்

அதிசயக்குழந்தை - பெயர்  --- ஏய் குழந்தாய்.... உன் பெயரென்ன ....? அதிசயகுழந்தை....!!! இது ஒரு பெயரா ...? அப்போ சொல்லுங்கள் ... ஆசானே.....  பெயர் என்றால் என்ன ...? நீ தான்  வியாக்கியான வித்தகன்- சொல் ...!!! அஃறிணையில் பிறந்த மனிதனை ... " உயர்திணை" யாக்குவது ... தான் பெயர் என்றான் ....!!! புரியவில்லை என்றேன்.... விளக்கினான் இப்படி ..... நாய் ஓடியது (அஃறிணை) பறவை பறக்கிறது (அஃறிணை) கண்ணன் ஓடினான் (உயர்திணை) இப்போது புரிகிறதா என்றான் ....? புரிகிறது ஆனால் புரியல்ல .... மேலும் சொன்னான் ..... மனிதன் பிறக்கும் போதும் .... இறந்தபின்னும் அஃறிணை....!!! இதோ என் விளக்கம் .... குழந்தை அழுகிறது (அஃறிணை) பிணம் எரிகிறது (அஃறிணை) கண்ணன் அழுகிறான் ( உயர் திணை ) இப்போ பாருங்கள் ஆசானே .... அஃறிணை பிறந்த மனிதன் .... அஃறிணை இறக்கிறான் .... இந்த இடைப்பட்ட காலத்தில் .... மனிதனை உயர்திணையாக்கும்.... ஒரு மொழிக்கருவியே - பெயர் ....!!! என்று மனிதனுக்கு பெயர் .... சூட்ட படுகிறதோ -அன்றே அவன் .... உயர் திணையில் அழைக்கப்படுகிறான் ....!!! மனிதனின் வாழ்க்கை காலத்தை .... உயர் தினையாக்குவதே -பெயர் ....!!! ^ அ

அதிசயக்குழந்தை - உறக்கம்

அதிசயக்குழந்தை - உறக்கம்  -------- ஏய்  குழந்தாய் நேரமாகி விட்டது உறங்கவில்லையா ....? உறக்கம் என்றால் என்ன ....? நானே சொல்கிறேன் ஆசானே ....!!! மூளை ஓய்வெடுப்பது உறக்கம் .... மூளை செயல் இழப்பது மரணம் .... கண்ணை மூடுவது உறக்கமில்லை.... கண் மூடுவது என்பது சாதாரண ... விடயமும் இல்லை மிக கடின வேலை....!!! அப்படியென்ன கடினம் என்று கேட்டேன் ...? வெறும் கண்ணை மூடுவது ஒன்றும் ... கடினமில்லை .இரண்டு இமையும்  இணைத்தால் போது அது கண் மூடல் ... என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம் .... தவறு கண்மூடினால் ஒன்றுமே .... தெரியாமல் இருப்பது மட்டுமல்ல .... ஒன்றுமே நினைக்காமல் இருப்பதே .... உண்மை கண் மூடல் .....!!! புருவத்தின் மத்தியில் நினைவை  கொண்டுவந்து கண்மூடி உள்ளே ... பாருங்கள் உங்களை நீங்கள் .... அறிவீர்கள் உங்களின் அத்துணை ... குணமும் படமாய் ஓடும் ..... என்று அந்த படமெல்லாம் ஓடி ... கலைத்து வெறும் திரை கண் முன் ... வருகிறதோ அன்றே நீங்கள் .... உண்மையான கண் மூடல்  அனுபவத்தை பெற்றுள்ளீர்கள் .... வாழ்நாளில் என்றொ ஒரு நாள் ... இப்படி கண்மூடிபாருங்கள் .... சொர்க்கம் தெரியும் என்றான் ......!!!  ^ அதிசயக்குழந்தை 

அதிசயக்குழந்தை - உணவு

அதிசயக்குழந்தை - உணவு  ----- சாப்பிடாயா என்று கேட்டேன் .... சாப்பிடேன் என்றான் ..... அதிசய குழ்ந்தை .......!!! என்ன சாப்பிட்டாய் ....? என்ன சாப்பிடாய் என்று கேட்காமல் .... எப்படி சாப்பிடாய் என்று கேளுங்கள் ... என்று சொன்னான் .....!!! எப்படி சாப்பிட்டாய் ....? அடித்து பறித்து சாப்பிட்டேன் .... நீ அத்தனை கொடூரமானவனா ...? நான் மட்டுமல்ல நீங்களும் .... அப்படித்தான் சாப்பிட்டு உள்ளீர் .....!!! தன் இனத்தை பெருக்க வந்தத .... தன் உணர்வை வெளிப்படுத்த வந்த .... அத்தனை உயிரினத்தையும் .... நாம் அடித்து அதன் வாழ்வுரிமையை .... பறித்துதானே - சாப்பிடுகிறோம் .....!!! மாங்காய் தேங்காய் என்று .... அவை முதுமை அடைய முன்னரே .... அடித்து இழுத்து பறித்து சாப்பிடுகிறோம் ..... குடியோடு குடித்தனமாய் தூங்கும் ... ஜீவன்களுக்கு தூக்கத்திலேயே .... கண்ணி வைத்து கொலை செய்து .... சாப்பிடுகிறோம் ...... கூட்டம் கூட்டமாய் பார்க்கும் .... பறவைகள் - சாரை சாரையாய் ... அலைந்து திரியும் மீன்கள் .... அத்தனைக்கும் வலைபோட்டு .... வாழ்வுரிமையை சாப்பிடுகிறோம் ....!!! எல்லாமே இறைவன் எமக்கே .... படைத்தவன் என்று இறைவனை .... பிணையாக

அதிசயக்குழந்தை - பூதம்

அதிசயக்குழந்தை - பூதம்  ------- ஒட்டு துணிகூட இல்லாமல் ... பிறந்த மேனியோடு கட்டாந்தரையில் .... புழுதி மண்ணுக்குள் உருண்டு பிரண்டு .... விளையாடிகொண்டிருந்தான் .... அதிசயக்குழந்தை ....... டேய் எழுந்திரு என்று அதட்டினேன் ... எதற்கு என்று கேட்டான் அவன் ....!!! மண்ணுக்குள் விளையாடுகிறாயே .... உடம்பு முழுக்க அழுக்கு படுத்தே ... என்றேன் .... நீங்க மட்டும் அழுகில்லையோ...? என்றான் அவன் - மேலும் சொன்னான் .... ஆசானுக்கு நான் சொல்வதா ...? ஊழ்வினை உடம்பே அழுக்குதான் .... பஞ்ச பூத கூட்டுத்தானே உடம்பு ....!!! மனத்தின் அழுக்கை நீக்க  கண்ணீரால் (தண்ணீர் ) கழுவுகிறீர்கள் .... உடலின் அழுக்கை நீக்கவும் ... தண்ணீரால் கழுவுகிறீர்கள் .... கோபப்படும் போது " நெருப்பாய்" கொதிக்குறீங்க .. உள்ளத்தை துளைக்கும் சொல்லை ... காற்றோடு கலக்கிறீங்க .... உங்களின் அசுத்தம் ஆகாயத்தையும் ... அசுத்தமாக்கும் போது  நான் இந்த மண்ணில் புரளுவது மட்டும்  உங்களுக்கு அழுக்காய் தெரிகிறதோ ....? என்றான் - அதியக்குழந்தை.....!!! போதும் போதும் உன் வியாக்கியானம் .. என்று கூறிக்கொண்டு ஒரு சிறு தடி எடுத்து ... அதட்டினேன் ..... விழு