வாழ்க்கையில் உதவியவை .....!!!
வாழ்க்கையில் உதவியவை .....!!! ----- ஏழையாக வாழ்ந்திருக்கிறேன்...... கோழையாக வாழவில்லை..... தந்தையின் உபதேசம் அது.......! மன்னித்து பழகியிருக்கிறேன்..... மண்டியிட்டு வாழவில்லை...... தாயின் வளர்ப்பு அது.............! திட்டு வாங்கியிருக்கிறென்........ முட்டாளாக வாழவில்லை...... அண்ணனின் உபதேசம் அது.....! தலை குனிந்து வாழ்ந்திருகிறேன்..... தலை குனியும்படி வாழவில்லை...... உற்றர் உறவினர்களின் தூண்டுதல்......! தலை நிமிர்ந்து வாழ்கிறேன்..... தலை கனத்தோடு வாழவில்லை.... இறைவனின் அருள் கிருபை அது.....! ^ தொடர் கவிதை தொகுப்பு கவிப்புயல் இனியவன் என் இதயம் பேசுகிறது 02