வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகிறேன் உன் முகத்தை ...!!! மறக்க மறக்க ஊற்றாய் வருகிறது உன் நினைவுகள் ...!!! காதல் என்றால் வலி இருக்கலாம் வலியே காதலாக இருக்குதடி என் வாழ்வில் ...!!! 01 --------------- நான் எங்கே தனிமையில் இருந்தேன் -உன் நினைவின் வலிகளுடன் தானே வாழுகிறேன் ...!!! உன் மடியை ஒருமுறை கொடு தூங்க அல்ல என் மூச்சை விட ....!!! தூங்கியதே இல்லை கண்ணீருடன் இருக்கும் கண்கள் தூங்குவதோ ...? 02 -------------- அந்த நிமிடம் வரை வலியில்லை இந்த நிமிடம் வரை வலியில்லாமல் இருந்ததில்லை .... உன்னை காதலித்ததால் ....!!! இதயத்தில் என் ஒவ்வொரு நரம்பையும் முற்களாக மாற்றியவள் -நீ என் இதயம் ஈரமாக இருப்பதால் காத்திருக்கிறேன் முற் செடியில் மலர் வரலாம் என்ற சின்ன ஆசையுடன் ........!!! 03 ------------- என் இதயத்தை கேட்டுப்பார் உன் நினைவுகளை தாங்காமல் துடிக்கும் துடிப்பை .....!!! காதல் நரம்பில் வந்த இன்ப இசையில் சோககீதம் பாடவைத்தாய்..... எப்படியோ என்னுடன் நீ இருப்பாய் என்ற ஆசையுடன் வாழ்ந்தேன் ....!!! என் ஒவ்வொரு இதய நரம்பையும் அறுத்துவ
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு உபகிரகம் உள்ளது. அவை. கிரகம் உபகிரகம் சூரியன் காலன் சந்திரன் செவ்வாய் புதன் அர்த்தப் பிரகரன் வியாழன் யமகண்டகன் சுக்கிரன் சனி குளிகன் ராகு கேது மாந்தி சந்திரன், சுக்கிரன், ராகு, கேது ஆகிய கிரகங்களின் உபகிரகங்கள் சூரியனுடைய ஸ்புடத்திலிருந்து கணிக்கப்படுகின்றன. துமாதி உபகிரகங்கள் கிரகம் உபகிரகம் கணிக்கும் முறை செவ்வாய் தூமன் சூரியனுடைய ஸ்புடம் + 133 பாகை. 20 கலை. ராகு வியதிபாதன் 360 - தூமன் சந்திரன் பரிவேடன் 180 + வியதிபாதன் சுக்கிரன் இந்திர தனுசு 360 + பரிவேடன் கேது உபகேது இந்திர தனுசு + 16 பாகை. 40 கலை. சூரியன், புதன், குரு, சனி மற்றும் செவ்வாய் ஆகியவற்றின் உபகிரகங்கள் அஹசின் அல்லது இரா அஹசின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. இந்த அஹஸ் அல்லது இர அகஸ் எட்டு சம அளவில் பிரிக்கப்படுகிறது. முதல் பிரிவு அன்றைய அதிபதியின் பிரிவு ஆகும். மற்றவை அதற்குபின் தொடர்ந்து வருவதாகும். எட்டாவது பிரிவுக்கு எந்த அதிபதியும் கிடையாது. இரவு நேரத்தில் பிறந்தவர்களுக்கு எட்டு பகுதியில் முதல் ஏழு பிரிவு, ஐந்தாவது வார அதிபதியிலிருந்து கணக்கிடப்பகிறத
தை - திருமகளே வருக வருக .... தைரியம் துணிவு சிறக்க வருக வருக .... தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக .... தைத்தியரை அழிக்க வருக வருக ....!!! முற்றத்தில் கோலமிட்டு ..... முக் - கல் அடுப்பு வைத்து .... முத்திரி விளக்கேற்றி ..... முக்குணத்தை அழிக்க ... முக்காலமும் சிறப்பாக அமைய .... கரம் கூப்பி உம்மை அழைக்கிறேன் தை- திருமகளே வருக வருக ....!!! உன்னையே உயிராய் ..... உன்னையே தொழிலாய் .... உன்னையே மூச்சாய் வாழும் .... உன்னையே தெய்வமாய் ..... உழைத்து வாழும் உழவு விவசாயம்... செழித்து வாழ என் உயிர் தாயே .... தை- திருமகளே வருக வருக ....!!! ^ பொங்கல் கவிதை ---- பொங்கல் ஹைக்கூ -------- சேற்றை மிதித்து சோற்றை தருபவன் நாள் பொங்கல் ^^^ பச்சரிசி பல் அழகி பால்வடியும் முகஅழகி பொங்கல் ^^^ மும்மாரி பொழிந்து மூவேளை உணவுதரும் நாள் பொங்கல் ^^^ கவிப்புயல் இனியவன் பொங்கல் வாழ்த்துகள் ----- பொங்கல் சென்ரியூ ----- எறும்புக்கு கொண்டாட்டம் சக்கரை நோயாளிக்கு திண்டாட்டம் பொங்கல் ^^^ நெல் கதிர் ராணிக்கு சூரிய ராஜாவுக்கும் திருமணம் பொங்கல் ^^^ சக்கரை நோயாளிக்கு எச்சரிக்கை வைத்தியர் பொங்கல் ^^^ கவ
கருத்துகள்
கருத்துரையிடுக