வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

கொஞ்சம் கொஞ்சமாக 
மறந்து வருகிறேன் 
உன் முகத்தை ...!!!

மறக்க மறக்க 
ஊற்றாய் வருகிறது 
உன் நினைவுகள் ...!!!

காதல் என்றால் 
வலி இருக்கலாம் 
வலியே காதலாக 
இருக்குதடி என் வாழ்வில் ...!!!

01
---------------
நான் 
எங்கே தனிமையில் 
இருந்தேன் -உன் 
நினைவின் வலிகளுடன் 
தானே வாழுகிறேன் ...!!!

உன் 
மடியை ஒருமுறை 
கொடு தூங்க அல்ல 
என் மூச்சை விட ....!!!

தூங்கியதே இல்லை 
கண்ணீருடன் இருக்கும் 
கண்கள் தூங்குவதோ ...?

02
--------------
அந்த நிமிடம் 
வரை வலியில்லை 
இந்த நிமிடம் வரை 
வலியில்லாமல்
இருந்ததில்லை ....
உன்னை காதலித்ததால் ....!!!

இதயத்தில் என் ஒவ்வொரு 
நரம்பையும் முற்களாக 
மாற்றியவள் -நீ 

என் 
இதயம் ஈரமாக இருப்பதால் 
காத்திருக்கிறேன் முற் செடியில் 
மலர் வரலாம் என்ற சின்ன 
ஆசையுடன் ........!!!

03
-------------
என் இதயத்தை கேட்டுப்பார் 
உன் நினைவுகளை தாங்காமல் 
துடிக்கும் துடிப்பை .....!!!

காதல் நரம்பில் வந்த 
இன்ப இசையில் 
சோககீதம் பாடவைத்தாய்..... 
எப்படியோ என்னுடன் நீ 
இருப்பாய் என்ற ஆசையுடன் 
வாழ்ந்தேன் ....!!!

என் ஒவ்வொரு இதய 
நரம்பையும் அறுத்துவிட்டு 
காதல் வீணையில் ஓசை 
இல்லை என்கிறாயே ....!!!

04
------------
எதை 
தொடர்ந்து செய்கிறோமோ ..
அது வாழ்க்கையாக மாறும் 
நீ தரும் வலியும் அப்படிதான் ....!!!

எத்தனை வலி தந்தாலும் ....
நீ என்னோடு பேசு அன்பே ....
நீ திட்டி பேசினாலும் போதும் 
நீ பேசாமல் இருந்தால் -நான் 
பேச்சு மூச்சு இல்லாமல் 
போய் விடுவேன் ....!!!

என்னை 
திட்டிய வார்த்தைகளை 
திரட்டி பார் உன்னையே -நீ 
திட்டுவாய் .....!!!

05
------------
கவலை படாதே ..
நான் காதல் தோல்விக்காக 
இறக்க மாட்டேன் ...
நான் இறந்தால் காதல் ..
இறக்க போவதில்லை .....!!!

உன்னை 
நேசித்ததை காட்டிலும் -நம் 
காதலை அதிகம் நேசித்தேன் 
அதனால் தான் காதல் வலியால்
துடிக்கிறேன் .....!!!

என் இதய ஓசையை ஒரு 
முறை என் நெஞ்சில் சாய்ந்து 
கேள் உயிரே - அப்போது 
என்றாலும் என் இதயம் 
இன்பமாக ஒருமுறை இருக்கட்டும் ...!!!

06
-------------
நீ 
உதட்டால் 
பேசிய வார்த்தையை 
நான் காதல் என்று 
தப்பாக புரிந்து விட்டேன் ....!!!

உதடும் இதயமும் 
காதலிப்பது ,,,,,
தண்ணீரும் எண்ணையும்...
காதலிப்பது போல் ....!!!

உன் வீட்டோரம் நான் 
நடந்த பாதைக்கு என் 
பெயரை கூட வைக்கலாம் 
பாதைக்கு தெரியும் என் வலி ....!!!

07
---------------------
நான் 
நிஜமாக காதலித்தேன் 
நீ 
நிழலாக காதலித்திருக்கிறாய் .....!!!

நிஜமாக காதலித்த என்னை 
ஏனடி நிராகரித்தாய் ...?
உனக்கு மாயை காதல் 
பிடிக்குமோ ....?

உன்னை காதலித்ததால் 
என் நிம்மதி தொலைந்து 
விட்டது - என்றாலும் 
என் காதல் தொலையவில்லை 
அதுவரை நான் காதலிப்பேன் ...!!!

08
------------
உயிரே உன் மனதில் நான் ..
இல்லை என்று தெரிந்த ..
அடுத்த கனமே -என் இதயம் ...
துடிக்காது - வெடித்து விடும் ...!!!

உண்மையை சொன்னால் ...
உன்னை போல் என்னால் ....
இருக்க முடியாது ....
முடிந்தவரை உன் நினைவில் ...
இருப்பேன் -முடியாது
விடின் என் நினைவை ...
இழப்பேன் ....!!!

09
--------------
நீ தூரத்தில் வரும் 
போதெல்லாம் துள்ளி ...
குதித்த இதயம் -இப்போ 
நீ அருகில் வரும் போதே ..
என்னை கிள்ளுது அவளை ...
பார்க்காதே என்று ....!!! 

வலியை தாங்கிய ...
இதயத்துக்கு தானே ...
நீ தந்த வலியின் வலி 
தெரியும் ......!!!

10
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,