இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

கவிஞன் (கவிப்புயல்).....
அறிவியலுக்கும் கவிதை.....
அரசியலுக்கும் கவிதை.....
அன்புக்கும் கவிதை.....
அம்மாவுக்கும் கவிதை.....
காதலுக்கும் கவிதை.....
கல்விக்கும் கவிதை.....
கடவுளுக்கும் கவிதை.....
கவிதைக்கும் கவிதை.....
பொல்லாதவருக்கும் கவிதை.....
பொருளாதாரத்துக்கும் கவிதை.....
பொன்னுக்கும் கவிதை.....
பொம்மைக்கும் கவிதை.....
எழுதுகிறாய் நீ கவிதை , கவிதை , கவிதை.....
உன் திறமைக்கு உரிய சந்தர்ப்பம் கிடைக்குமானால் 
"வைரமுத்து, வாலி " எல்லோரையும் தள்ளியிருப்பாய் உன் பின்னே.....
கவிதையை வாசித்துவிட்டு, எப்படித்தான் இதை எழுதுகிறார்களோ?.....
என ஒருவகையான ஆச்சரியம் கலந்த ஏக்கத்துடன் பார்த்த நானும் அரைக்(1/2) கவிஞனானது உன் கவிதையை வாசித்து வாசித்துத் தான்.
போதாது உனக்குக் கவிப்புயல் பட்டம்.....
தொடரட்டும் கவிதைக்கும் தமிழுக்கும் உனது சேவை.....
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
ஆ.இராஜ்மோகன்.

ஆ. இராஜ்மோகன்.
நேற்று, 05:21 AM ·
16.11.2016

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,