கடல் வழிக்கால்வாய் 02

--------------------------------
கடல் வழிக்கால்வாய்
--------------------------------
.........இறைவனோடு ஒரு தொடர்பாடல்.......

^^^^^^^^^

என் விஞ்ஞான அறிவை ....
பயன்படுத்தி இறைவனோடு ...
பேசுவதற்கு  தொலைபேசியை ...
கண்டு பிடித்தேன் - பலமுறை ...
முயற்சித்தேன் மறுமுனையில் ...
யாருமில்லை ......!!!

நீங்கள் அழைக்கும் நபர்
வேறு ஒரு தொடர்பில் இருக்கிறார் ...
சற்று நேரத்தின் பின் தொடர்பு ...
கொள்ளவும் என்று கூட ....
மறுமுனையில் இருந்து வரவில்லை ....
இணைப்பு துண்டிக்கப்படவில்லை ....!!!

என்ன ஆச்சரியம் ....
ஒருநாள் மறுமுனையில் இறைவன் .....
யார் பேசுகிறீர்கள் என்று கேட்டேன் ...
நீதான் பேசுகிறாய் என்றார் இறைவன் ....
எத்தனை உண்மையான வசனம் அது ....!!!

இறைவா தயவு செய்து ...
இணைப்பை துண்டித்துவிடாதே....
உன்னிடம் நிறைய கேள்வி இருக்கு ....
நீ துண்டிக்கும் வரையும் நான் ...
துண்டிக்கபடமாட்டேன் என்றார் ...
இறைவன் ......!!!
எத்தனை உண்மையான வசனம் அது ....!!!

உன் படைப்பில் ஏன் இத்தனை ....
வேறுபாடுகள் - அறிவாளி ...
அறிவிலி - உயர்ந்தவன் தாழ்ந்தவன் ...
படித்தவன் படிக்காதவன் ....
இன்னும் இன்னும் எத்தனையோ ....
ஏன் இத்தனை வேறுபாடுகள் ....?

இறைவன் சிரித்துகொண்டு ...
சொன்னார் என் படைப்பில் ...
வேறுபாடு என்றும் இல்லை ...
உங்கள் எண்ணத்தாலும் ....
செயலாலும்தான் இத்தனை ...
வேறு பாடுகள் நீங்கள் தான் ...
வேறு படுத்தினீர்கள்
வேறுபடுகிறீர்கள் என்றார் ....!!!

இப்போதும் பார் நீ கூட
இறைவனோடு பேசுகிறாய் ...
என்று உன்னோடு ஆழ்மனதோடு ....
பேசுகிறாய் -கண்டு பிடித்துவிட்டாய் ....
கடலின் பாதையை  .....!!!
ஒன்றுமே சொல்லாமல் இறைவன் ...
போய் விட்டார் - மன்னிக்கவும்
என்னுள் அடங்கிவிட்டார் .....!!!
எத்தனை உண்மையான வசனம் இது ....!!!
&
கடல் வழிக்கால்வாய்
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,