இனியவனின் முயற்சி கவிதைகள் 05

இறக்கபோகிறேன் ...
என்று தெரிந்துகொண்டு....
தீக்குச்சி எரிகிறது ....
தீக்குச்சிக்கு அது இறப்பல்ல ....
தீக்குச்சியின் வாழ்க்கை....!!!

இறப்பு பெரிதல்ல ....
எப்படி வாழ்ந்தோம் 
என்பதுதான் முக்கியம் ....!!!

தான் மட்டும் எரிந்து ....
சாம்பலாகவில்லை ...
இன்னொன்றுக்கு ...
வாழ்க்கையும் ......
கொடுத்துவிட்டு .......
சங்கமமாகிறது தீக்குச்சி ....!!!

^
முயன்றால் முடியாதென்றொன்றில்லை 
கவிப்புயல் இனியவன் 

****
தலை முழுக்க நச்சு .....
நல்ல சிந்தனையே இல்லை ....
கெட்டவருடன் ஒன்று சேர்ந்து ....
சாம்பலாகிறது ....
தீக்குச்சி .....!!!

மனிதா சிந்தனையை ....
சீராக்கு - நல்லவர்களுடன் ...
ஒன்று சேர் ....
இல்லையேல் உன் கெதியும் ...
தீக்குச்சியின் கெதிதான் ....!!!

தீக்குச்சி 
தானாக எரிவதில்லை....
இன்னொரு கெட்டதுடன்....
சேர்ந்தே எரிகிறது ....
ஒருவன் கெடுவது தற்செயல் ....
கெட்டவனோடு சேர்வது ....
அதர்மம் ......!!!

^
முயன்றால் முடியாதென்றொன்றில்லை 
கவிப்புயல் இனியவன் 
----
உலகில்...... 
வென்றவர்கள் ...
பட்டியலை விட ...
தோற்றவர்கள் ....
தோற்று கொண்டிருப்பவர்கள் ...
பட்டியலே அதிகம் ....!!!

தோல்வி என்பது ...
வெற்றியின் கருவறை .....
உரு பெற்றவுடன் தான் ...
பிறப்பு வருவதுபோல் ....
தோல்விகள் நிறைந்ததே ....
வெற்றி ....!!!

ஒன்றை நினைவில் வை ...
நீ தோற்றது - இன்னொருவனுக்கு ....
அனுபவம் .....
அவனுக்கு வெற்றியின் வெளிச்சம் ...!!!

^
முயன்றால் முடியாதென்றொன்றில்லை 
கவிப்புயல் இனியவன் 
---
இருக்கும் 
போது தூற்றுவதும் .....
இறந்த பின் புகழ்வதும் ....
மனித இயல்பு ...... !!!

கடந்த வருடத்தை .....
வெறுப்பதும் ....
புதிய வருடத்தை ....
வரவேற்பதும் வழமை ....!!!

வருடங்கள் மாறிக்கொண்டே ....
போவது போல் வாழ்கையும் ....
மாறிக்கொண்டே போகும் .....
இழந்தவற்றை இழப்பாக ....
நினைந்தால் சென்றவருடம் ....
கொடுமையானது .....
இழந்தவற்றை அனுபவமாக ....
நினைத்தால் சென்றவருடம் ....
வாழ்கை உரம் .....!!!

வரப்போவதை இன்பமாக ....
நினைத்தால் புதுவருடம் ....
சுமை ......
வரப்போவது துன்பமாக ....
நினைத்தால் புதுவருடம் ....
சுமை ......
எதிர் பார்ப்புகளே .....
வாழ்க்கை சுமைக்கு வழி ....!!!

கடந்த 
வருடத்தில் சாதனைகள் ....
சோதனைகள் ....
இன்பங்கள் துன்பங்கள் ....
அனைத்தையும் மறந்துவிடு ....
புது வருடத்தின் எதிர்பார்புகளை ....
முற்றாகக நீக்கிவிடு .....!!!

நிறைவேறாத 
ஆசையின் வெளிப்பாடே ...
கோபம் ......
நிறைவேறிய 
ஆசையின் வெளிப்பாடே ...
பேராசை ......
கோபத்தினதும்....
பேராசையினதும் ......
வெளிப்பாடே பெரும் துன்பம் ....!!!

இந்த புத்தாண்டை ...
புத்துயிராண்டாக மாற்று .....
முடிந்தவற்றை முழுக்கு போடு ....
முடியாதவற்றை முழுக்கு போடு ....
முடிந்ததை முயற்சிசெய் ,,,,,
தோற்றுபோனால் தோற்றுவிடாதே ....
தோல்விக்கு ஒரு தோல்விகொடு ...!!! 


^^^
தன்னப்பிக்கையுடன் ஆரம்பிப்போம்    
தன்னம்பிக்கையே மூலதனம் ....
தன்னம்பிக்கையே வாழ்கை .....!!!
^
கவிப்புயல் இனியவன் 
----
நினைத்து சந்தோசப்படு.....!!!
------
சாண் ஏற முழம் சறுக்கிறது ....
கவலையை விடு .....
சாண் ஏறுகிறாயே ,,,,,
நினைத்து சந்தோசப்படு.....!!!

முயற்சி எடுத்தால் ...
முதல் வருவது தோல்விதான் ....
அடுத்துவருவதும் தோல்விதான் 
தோல்வி உன்னோடு போராடுகிறது ....
நீயா நானா என்று போராடுகிறது ....
தோல்வி வென்றால் நீ ....
தோற்கிறாய் ........!!!

^
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05