வலிக்கும் இதயத்தின் கவிதை 71-80

என் 
ஆனந்த காற்றாய் ....
ஆரோக்கிய காற்றாய் ....
என்னோடு இருந்தவளே ....!!!

சிரிக்கும்போது ....
உன்னோடு சத்தமாய் ....
சிரித்தேன் ....
அழும்போது தனியே ....
உனக்கு கூட தெரியாமல் ....
அழுகிறேன் ....
என் அழுகையால்....
உன்கண்கள் கலங்கிட கூடாது ....!!!

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
--------
ஏமாறமாட்டேன் ....
எப்படி ஏமாற்றுவது ...
என்பதை உன்னிடம் ....
கற்றுகொண்டேன் ....
இனியாரும் என்னை ....
ஏமாற்ற முடியாது ....!!!

காதலிக்க மாட்டேன்....
யாரையும் காதலிக்க மாட்டேன் ....
இதயமில்லாத உன்னைப்போல் ...
யாரையும் காதலிக்க மாட்டேன் ...!!!

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
----------
உன்னை நினைத்து 
சுட்டுக்கொண்ட காயங்கள் 
நீ என்னிடம் விட்டுச்சென்ற 
நினைவுகள் ஏற்படுத்திய
காயங்களின் வலியே அதிகம்…!!!

தரையில் விழுந்த மீனும் 
தண்ணீரில் தாழ்ந்த மானும்
துடிக்கும் துடிப்பை உணர்ந்து 
கொள்கிறது உன்னை
தவறவிட்ட என் இதயம்….!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
-----------
விஷத்தை அருந்தியவன் 
அடுத்த நொடியில் 
இறந்து விடுகிறான் ...!!!

காதலில் தோற்றவன் ....
உயிரோடு இருந்தும் ...
இறந்தவன் தான் ....!!!

காதலில் வென்றவன் ...
கொஞ்சம் கொஞ்சமாய் ...
செத்துகொண்டிருப்பவன் ...!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
---------
அன்பே 
இன்று வருடத்தின் ....
இறுதிநாள் இன்றாவது 
என்னோடு பேசிவிடு ......!!!

கடந்த
வருடத்தில் நடந்தவை .....
கடந்தவையாகட்டும் .....
நடத்து வந்ததை மறந்து ...
நடக்கப்போவதை நினை ....!!!

பிறப்பது புத்தாண்டாயின் .....
நீ என்னோடு இணைவதில் ....
தங்கியுள்ளது எனக்கு ....
இல்லையேல் பொழுது விடியும் ....
வருடம் மாறாது எனக்கு ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
--------
நீ ...
எத்தனை வருடம்... 
மௌனமாய் 
இருக்கபோகிறாய்...?
உலக சாததையா 
செய்யப்போகிறாய் ....?
அதிககாலம் மௌனமாய் ...
இருந்த ஜோடி நாம் என்று ...?

இன்னும் சிலமணி நேரமே .....
இருக்கிறது முடித்துவிடு ....
மௌனத்தை - வேண்டாம்...
அடுத்த வருடத்துக்கும் ....
துன்பம் ......!!! 
----------
கைபேசியை பார்த்து பார்த்து....
கழைத்து விட்டேன் -ஒரு சிறு ....
செய்தியை பிறக்கும் வருடத்தில் ...
வாழ்த்தி அனுப்புவாய் என்று ......!!!

வாழ்கை வாழ்வதற்கே .....
அதை அன்பாய் வாழ்ந்து ....
முடிப்பதே வாழ்கை ....
கோபத்தையும் கர்வத்தையும் ....
வளர்க்காதே - வா அன்பே .....
புதிய ஆண்டில் ....
புது வாழ்வு வாழ்வோம் ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
---------
நீ என்னோடு ....
கோபமாய் இருக்கிறாய் ....
நன்கு தெரிகிறது ...
என்னோடு பேசும்போதே ...
பூமரத்தின் இலையை ....
பித்துகொண்டு இருகிறாய்
பாவம் அதை நிறுத்து ....
அது என்னசெய்தது உனக்கு....?

உன் கோபத்தால் ....
நான் உயிரோடு இருந்தும் ....
என் மரண ஊர்வலத்தை ....
பார்த்துகொண்டிருகிறாய்....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
----------------
உன்னை பிரிந்த பின் 
என் இறந்த உடலை ....
நானே பார்கிறேன் ....!!!

என் 
இறந்த உடலுக்கு அருகில் 
நீயும் நிற்பதை நான் 
பார்க்கிறேன் .....!!!

நான் இறந்தபின் என் ...
உடலை பார்ப்பதும் ....
நீ அருகில் இருப்பதையும் 
பார்க்கும் முதல் மனிதன் ....
நான் தான் .....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
-------------
உன்னையும் ....
உன் வலிகளையும்......
எவ்வளவேனும் நான் ...
சுமப்பேன் ....
என்னை உன் விழிகளில் .....
சுமந்து விடு ....!!!

மற்ந்து விடு என்று ....
ஒருமுறை சொல் .....
என்னை மறந்து விடுகிறேன் ....
என் உறவுகளை மறந்து ....
விடுகிறேன் ......!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
----
உன்னோடு 
இணைந்து திரிந்த நான்..... 
தனியாக போகிறேன்..
எப்போதோ தொலைத்த ஒன்றை
தேடிக்கொண்டு.....!!!

வளையல் சத்தம் கேட்கிறது 
கொலுசின் ஓசை கேட்கிறது 
சிரிப்பொலிகள் கேட்கிறது 
எல்லாம் பிரம்மையில் ....!!!

தேடித்தேடி 
அலைகின்றேன்
தேடியது கிட்டவில்லை
கிடைத்தது ஒன்று ....
எனக்கு பிடிக்கவில்லை ...!!!

வாழ்க்கையெனும்....
மனச்சோலையில்.... 
வாழ்ந்து கொண்டுடிருக்கிறேன்....
உயிரின் வலிஅறியவில்லை.....
உறங்குகின்றேன் காதலியே.....
உன் நினைவோடு.....!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,