கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை (S M S ) - 20

முள் இதய தோட்டம்
-------------
இதயத்துக்குள் .... 
முள் வளரும் தோட்டத்தை .... 
பார்க்கப்போகிறாயா .....? 
ஒருமுறை -என் 
இதயத்துக்குள் வந்துபார் .....!!!

---
இரட்டை பூ
-------------
நீ காதல் பரிசாய் .... 
தந்த ரோஜா செடி ... 
இரட்டை பூ பூத்திருக்கு .... 
நானும் நீயும் ... 
எப்போது இரட்டை பூ ... 
ஆவேம்.....?
---
நாளை சொல்கிறேன் .... 
நாளை சொல்கிறேன் ..... 
என்று சொல்லிக்கொண்டே ... 
போகிறாய் .... 
எத்தனை முறைதான் ... 
ஏமாறுவது .....?
----
எல்லோரும் ... 
கற்பதில் பிறந்து .... 
கல்லறையில் ... 
முடிகிறார்கள் ..... 
நான் மட்டும் ... 
உன் பார்வையில் ... 
பிறந்து மரிக்கிறேன் ...!!!

----
உனக்காக .... 
எத்தனை நாள் ... 
ஏங்கினேன் ... 
எனக்காக ... 
நீயும் ஏங்கினாய் .. 
என் மன ஆறுதலுக்கு 
சொல்லேன் .....!!!
---
கனவுகாய் 
காத்திருக்கிறேன் 
அப்போது இனிமையாய் 
வருவாயோ ...!!! 
உன் அழகால் 
இதயம் முழுக்க 
காயப்பட்டிருக்கிறேன் ....!!!
----
இப்போ அடைமழை ....
வானத்தை எந்த காதலி ...
ஏமாற்றினாளோ ...?

என் நினைவுகள் ..
உனக்கு தூறல் மழை ...
எனக்கு அடைமழை ...!!!
----
எல்லோருக்கும் ....
என்னை பிடிகிறது ....
எல்லோரும் என்னில் ...
அன்பை பொழிகிறார்கள் ....
உனக்கு மட்டும் என்னை ...
பிடிக்கவில்லை ....
எல்லாம் காதலின் விதி ...!!!
---
காதல் மனம் .....
விட்டு பேசவேண்டும் ....
என்றெல்லாம் இல்லை ...
மனதுக்குள் பேசினாலே ....
போதும் ....!!!
---
என் 
கண்ணீர் துளிகள்.....
உன்னில் படும் கூடவா ..?
உன் இதயத்தில் ஈரம் ...
வரவில்லை ....?

என் 
மூச்சு காற்று ...
பட்டும்கூடவா ....?
உனக்கு இன்னும் ...
காதல் பிறக்கவில்லை ...?
---
நான் 
எதை பேசினாலும் ...
உனக்கு தப்பாய் .....
தெரிகிறது ....!!!

நீ 
தப்பாய் பேசினாலும் ...
எனக்கு சரியாய் ....
தெரிகிறது ...!!!

----
நீ 
என்னை காதலிக்கவில்லை ...
என்று கவலை படவில்லை ....
இவனை காதலிக்காமல் ....
விட்டுவிட்டேனே என்று ....
கவலைபடபோகிறாயே...
என்று கவலைபடுகிறேன் ....!!!
---
என் 
எதிர்ப்பார்ப்பெல்லாம்
ஒரு சின்ன ஆசைதான் ...
எப்போதும் இடைவிடாது...
உன் நினைவுக்குள்....
நான் இருக்க வேண்டும்...
என்னோடு வாழ்கையில் ....
இறுதிவரை வரவேணும் ....
ஒரு சின்ன ஆசைதானே ...!!!
----

யாராலும் தர முடியாத....
வாழ்கையை காதலாய் ....
தந்தாய் ....!!!

அது ....
என் வாழ்வில் 
அழகியநிமிடங்கள் ....
மணித்துளிகள் .....
நாட்கள் ....
மாதங்கள் ....
வருடங்கள் .....
ஜென்மங்கள் 
தொடர்கின்றன .....!!!

---
அழகாய் இருக்கின்றன 
பூக்கள் என்று சொல்லகூட 
மனம் மாறுகிறது .....!!!

உன்னை காணாதவரை ....
அழகாய் இருந்தது உண்மை ...
இப்போ உன்னைப்போல் 
அழகில்லை எதுவும் ....
ஒருவேளை நீ மட்டும்...
அழகா இருக்கும் என் ...
காதல் மாயையோ ...?

----
நீ 
காதலிக்கலாம் ....
நிராகரிக்கலாம் ...
ஆனால்.....
உன்னால் கிடைக்கும்
எதுவும் எனக்கு .....
காதல்தான் ...!!!
---
நேசிப்பாதாய் மட்டும் .....
இருக்காதே -என்னை ...
சுவாசிப்பாதாய் -இரு ...!!!
---
என் 
காதல் வலிகளை....
வார்த்தையால் தர ....
முடியவில்லை .....!!!
வரிகளாய் தருகிறேன் ....!!!
நீ அதை கவிதை என்கிறாய் ...!!!
----
நீ என்னை 
எத்தனை முறை ....
அடிக்கடி பார்த்திருகிறாய்....?

நான் 
எத்தனைமுறை உன்னை ...
பார்த்து கண்சிமிடினேன் ....?
வானத்து நட்சத்திரங்கள் ....
தான் பதில் சொல்லனும்...!!!
----
ஒரு....
தலை காதலில் ....
ஏக்கம் அதிகம் ....
இரு......
தலை காதலில் ....
ஏமாற்றம் அதிகம் ....!!!

---
காதலின் அருமை
தெரியாதவர்களிடம்
காதலை வெளிபடுத்தி
வேதனையை அனுபவிப்பது
கல்லறையை அடைந்தவர்களே ...
அதிகம் ....!!!

----
நீ 
தூரத்தில் இருந்தாலும் ....
உன் மனம் என்னவோ ....
என் அருகில் தானே ....
இருக்கிறது ...!!!

உன் 
மனம் இருக்கும் 
தூரம் அதிகமாகி போனால் ...
என் உயிர் உன் அருகில் ....
இருக்கும் ....!!!

----
உண்மையான 
அன்பு தோற்று போவதில்லை ....
உரிமை இல்லாதவர்களிடம்
காட்டும்போது அர்த்தமற்றதாகிறது ...!!!
----
கடைக்கண் பார்வைக்கு விடை ...
காதல் செய்தேன் - முடிவு .....
உயிரே நீ தான் சொல்லணும் ...?
---
இதயத்தில் இருந்து வெளியேறாதே....
என்னைவிட உன்னை யாரும் ....
இந்தளவுக்கு காதல் செய்ய மாட்டார்கள் ...!!!

----
நீ நடந்து வரும் பாதையை ...
காத்திருந்தே என் கண்கள் ....
காய்ந்து போகிறது....!!!
+
கவிப்புயல் இனியவன் 
குறுங்கவிதை (S M S )

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,