வலிக்கும் இதயத்தின் கவிதை 81-90

காதல்
இரு உள்ளங்களின்
ஏக்கம் ....!!!

ஏக்கத்தை புரிந்தவர்கள் 
வெல்லுகிறார்கள் ..
ஏக்கத்தை ...
தொலைத்தவர்கள் ...
தோற்கிறார்கள் ...!!!
----
என்னை விட்டுசென்ற...
அவளை இன்னும் காதலித்து ...
கொண்டுஇருக்கிறேன்....!!!

அவளை 
மறக்க முடியாமல் இல்லை.... 
இன்னொருத்தியை 
நினைக்கவும் முடியவில்லை ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
*****
அன்பால் 
அடிமையாகினேன் ...
என்று தப்பாய் ....
நினைத்துவிட்டேன் ....!!!

இப்போதான் ....
புரிந்தது என்னை ...
அடிமையாக்கவே ....
அன்பு வைத்திருகிறாய் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
----
வேண்டாம் என்னை ....
விட்டு விடு ....
காதலித்தது போதும் .....
விலக்கிவிடு ....!!!

தனியாக..... 
இருக்க என்னை.... 
அனுமதித்துவிடு ..
துணை வேண்டாம் ....
அன்பே என்னை ....
மறந்துவிடு ....!!!

பிணமாக 
நடக்க ஆசைப்படுகிறேன் 
உயிர் வேண்டாம் ....
உயிரே என்னை ....
மறந்துவிடு ....!!!

இத்தனையும் சொல்ல ....
துடிக்கிறது மனசு 
முடியவில்லை ....
உயிரே மன்னித்துவிடு ...!!!

இருக்கும் 
ஒவ்வொரு நிமிடமும் ...
ஒவ்வொரு மூச்சும் ...
அன்பே உனக்காகத்தான் ....
என்பதை மறந்துவிடாதே ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
-----
நிச்சயம் ,,,,
நீ எனக்கு சொந்தமில்லை ...
என்றோ அறிந்து விட்டேன் ....
இருந்தும் .....!!!

இதயம் ஏற்க தயங்குகிறது ....
உன்னையே நினைத்து ...
உனக்கே துடித்த இதயம் ....!!!

எப்படி ....?
உன்னைப்போல் திடீரென ....
மறக்கும் .....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
---**
ஆரம்பத்தில் ....
பார்வையால் கொன்றாய் ....
இடையில் ....
பாஷையால் கொன்றாய் ....
முடிவில் ....
பாவையே உன்னால் பட்ட ...
மரமாகிவிட்டேன் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
-----
பறவாயில்லை ....
காதல் பரிசாய் ....
வலிகள் என்றாலும் ....
தந்தாய் ....!!!

பரிசாய் ....
கிடைத்தவற்றை ....
பக்குவமாய் ....
சுமக்கிறேன் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
-----
நீ 
கிடைப்பாயா ....?
ஏங்கிய மனம் -இப்போ 
விட்டு விடுவாயா என்றும் ....
ஏங்கிதுடிகிறது ....!!!

கிடைத்த பின் காதல் ....
கிடைக்க முன் காதல் ....
ஏக்கத்தோடு வாழும் ....
வாழ்கையே காதல் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
-----
காதலின் 
கடும் தண்டனை ....
மௌனமாயிருந்து ....
கொல்வதே....!!!

உன்னைப்போல் ....
அன்பை என்மீது ...
யாரும் வைத்ததில்லை ...
உன்னை தவிர என்னால் ..
யாரிலும் அன்பு வைக்க ...
போவதில்லை ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,