கவிதையால் காதல் செய்கிறேன் 21-28

கண்டேன் 
என் தேவதையை கண்டேன் ....
கண் குளிர கண்டேன் என்னவளே ....!!!

அவளருகில் .....
ஆயிரம் பட்டாம் ....
பூச்சிகள் பறப்பதுபோல் ....
ஆயிரம் ஆயிரம் பெண்கள் ...
அத்தனைக்கும் மத்தியில் ....
தேவதையை கண்டேன் ....!!!

அவளுக்கு 
நான் யாரென்று தெரியாது..... 
அவளின்றி நான் இருக்கமாட்டேன் ....... 
அவளுக்கு தெரியாது ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 21
கவிப்புயல் இனியவன்

----
உலகின் 
ஒவ்வொரு உயிரினதுக்கும்...
ஜோடி படைக்கபடுகிறது....
எந்த மூலையில் இருந்தாலும் ....
இணைந்தே தீரும் -நீயும் 
இணையாமலாவிடுவாய்....?

சுய புத்தி 
இருந்து பயனில்லை 
காதல் புத்தி வரவேண்டும் ...
காதல் செய்வதற்கு ....!


+
கவிதையால் காதல் செய்கிறேன் 22
கவிப்புயல் இனியவன்

----
கையால் 
பொத்தி வைக்ககூடிய ....
அளவுதானே இதயம் ....
உன்னையும் பொத்தி ....
வைத்திருக்கிறேன் ....!!!

இதயத்துக்கு இரண்டு ....
தொழிற்பாடு ....
காதலிக்க -முன்- பின் ....
காதலுக்கு முன் உனக்காக ...
துடிக்கும் - காதலிக்க பின் ....
துடிப்பதே உனக்காக ...!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 23
கவிப்புயல் இனியவன்

----
தலை வாரும்போது ....
முடியில் உள்ள சிக்கலை ...
கஸ்ரபட்டேனும் எடுக்கிறாய்....
உன்னில் சிக்குப்பட்டிருக்கும் ...
என்னை எப்போது மீட்பாய் ...?

+
கவிதையால் காதல் செய்கிறேன் 24
கவிப்புயல் இனியவன்

----
ஒருவரைப்போல் ....
ஏழுபேர் இருப்பார்கள் ...
சொல்லக்கேள்வி ....
நீ மட்டும் ஒவ்வொருநாள் ...
ஒவ்வொரு அழகில் வருகிறாய் ...
ஏழு அழகிகளை ஒரே ...
ஆளில் பார்க்கிறேன் ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 26
கவிப்புயல் இனியவன்

----
ஏய் ...
கூட்டத்தில் கூட்டமாய் ...
செல்கிறாய் எல்லோரையும் ...
பார்பபோதுபோல் யாரை ....
தேடுகிறாய் .....?
தேடுவது வேறு என்னை ...
தேடுவது வேறு உன் கண் ....
படும் பாடு சொல்கிறது ...!!!
+
கவிதையால் காதல் செய்கிறேன் 27
கவிப்புயல் இனியவன்

---
நான் 
எதை கேட்டாலும் 
தர மறுக்கிறாய் ...
காதலை மறுத்துவிடாதே...!!!
நீ காதலை சொன்னவுடன் ...
ஒரே ஒரு முறை உன் ....
தோளில்சாய ......
அனுமதிப்பாயா ....?
+
கவிதையால் காதல் செய்கிறேன் 28
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,