இனியவன் மின்மினிக் கவிதைகள் 31-40

கத்தியால் கொலை ...
செய்தவன் குற்றவாளி ...
என்றால் -கண்ணால் ...
என்னை கொலை செய்த ....
நீ யார் .....?

காதலின் 
பிறப்பிடம் - கண் .....
காதலின் ....
இறப்பிடம் - கண் ..
என் கண் மூடுவரை ....
உன் மீது காதல் தொடரும் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
///////
பொழுது போக்குக்கும் ....
கவிதை எழுதவில்லை ....
பொழுதை போக்கவும் ....
கவிதை எழுதவில்லை ....!!!

கவிதை ....
உணர்வுகளின் உச்சம் ...
உன்னை என்னவாக ...
நினைக்கிறேனோ ....
அதுவாக எழுதும் ...
மனக்கண்ணாடி ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
//////////
விளக்கை ஏற்றினேன் ....
விட்டில் பூச்சியாய் வந்தாள் ....!!!

விளக்கை அணைத்தேன் ....
மின்மினியாய் வந்தாள்....!!!

ஒவ்வொரு பொழுதும் ....
அவள் வடிவம் மாறுகிறது ....
பச்சோந்திபோல்....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
(SMS கவிதை) 
கவிப்புயல் இனியவன்
***********
உன்னை எப்போது ...
சந்தித்தேனோ அன்றே ....
நம்பிவிட்டேன் ....
மறு ஜென்மத்தை ....!!!

என் ஜென்மத்தின் ....
நோக்கம் உன்னை ....
காதலித்து விடுவதே ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
//////
காற்றினால் இயங்கும் ...
கடிகாரம் ....
இதயம் ....!!!

------
கடுகு கவிதை 
கவிப்புயல் இனியவன்
/////
உன்னில் கலந்திருக்கும் ...
கொடிய விஷம் ...
கோபம் ....!!!

------
கடுகு கவிதை 
கவிப்புயல் இனியவன்
////
என்னிடம் எது 
வேணும் என்றாலும் கேள் 
தருவதற்க்கு தயாராக 
இருக்கிறேன் 
உன்னிடம் ஒன்றே 
ஒன்றை கேட்பேன் 
மறுத்து விடாதே .. 
காதலை ...?

//////
உன் இதயம் 
இரும்பு குண்டுபோல் 
பத்திரமாக வைத்திருக்கிறேன் .. 
நீயோ என் இதயத்தை 
திருவிழாவில் 
வாங்கிய பலூனைப்போல் 
ஊதி..ஊதி விளையாடுகிறாய் .. !!!
/////

உயிரே ....
நீ என்னோடு பேசு ....
இல்லை பேசாமல் இரு ...
காதலோடு இரு ....
அன்பே பேசாவிட்டாலும் ....
என் இதயத்தில் இரு ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
////
பிரியாத நினைவு....
கலையாத கனவு ....
வலிக்காத வலிகள் ...
கலங்காத கண்கள் ....!!!

தீராத காதல்....
அழியாத அன்பு....
விலகாத நட்பு....
உயிரான பண்பு....
எல்லாம் உன்னின் ...
காண வேண்டும் ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
****
தண்ணீருக்கும் 
நனைக்குத்தெரியும்...
கண்ணீருக்கும் ....
நனைக்குத்தெரியும்...
காரணங்கள் ஒன்றல்ல ...!!!

தீக்கும் எரிக்கதெரியும்....
சூரியனுக்கும் எரிக்கதெரியும்..
ஆறுதல் செய்ய தெரியாது ....
கவலை படாதே உன்னை ....
காயப்படுத்தவும் மாட்டேன்....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05