வலிக்கும் இதயத்தின் கவிதை 41-50

எங்கே வாங்கினாய் ....?
இதயத்தை பூட்டும் சாவியை ....
இரட்டை சாவியிருந்தால் ....
எனக்கும் ஒன்றை தந்துவிடு ....!!!

இந்த நிமிடத்தில் இருந்து .....
உன்னை நினைக்கமாட்டேன் ....
தோற்றுவிட்டேன் பலமுறை ....
உன்னை காணும் ஒவ்வொரு ...
நொடியும் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை 41
------
வலியுடன் நானும் அவளும்
என்னவளை இதயத்தில் .... 
வைத்திருந்தேன் -தப்புதான் ... 
என் இதயத்தையுமெல்லா.... 
கொண்றுவிட்டாள்.....!!! 

உயிரோடு இருதயசிகிச்சை ..... 
காதலில் தோற்ற இதயங்களில் .... 
நிகழ்ந்திருக்கும் ....!!! 

வலிக்கும் இதயத்தின் கவிதை 
வலியுடன் நானும் அவளும் ....!!!

கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
-------
காதல் இருக்கும்போது .... 
ஒவ்வொரு சொல்லுக்கும் ... 
ஒவ்வொரு காதல் ...... 
புத்தகம் தோன்றும் .....!!! 

காதல் பிரிவின்பின் .... 
கடந்த ஒவ்வொரு செயலுக்கும் .... 
ஒவ்வொரு காதல் ...... 
அகராதி தோன்றும் .....!!! 

வலிக்கும் இதயத்தின் கவிதை 
வலியுடன் நானும் அவளும்
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
----------
காதல் கவர்ச்சியால் ..... 
உன் இதயத்தில் ..... 
காதலாய் நுழைந்தேன் .... 
காதலும் காயபாட்டு விட்டது ....!!! 

நீங்கள் எப்போது .... 
காதலிக்க ஆரம்பிக்கிறீர்களோ .... 
அப்போது மெல்ல மெல்ல .... 
இறக்கவும் கற்றுகொள்ளுங்கள்...!!! 

வலிக்கும் இதயத்தின் கவிதை 
வலியுடன் நானும் அவளும் ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
----------
கிடைத்த நேரம் எல்லாம் .....
நினைத்தகாலம் போய்விட்டது ....
இப்போ நேரமே இல்லை ....
உன்னை நினைக்காமல் இருக்க ....!!!

உன் கோபங்களை ....
உன் ஆசை வார்த்தைகளை ....
சேமித்து வைத்திருக்கிறேன் ....
உன்னை நினைக்காமல் இருக்க ....
முடியவில்லை உயிரே ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
----------
நீ 
பேசிய வார்த்தைகளை ....
வடிவமைத்து எழுதிய ....
கவிதையை விட ....
உன் மௌனம் பேசிய ...
வார்த்தை வரிகள் தான் ....
என் கவிதையில் அதிகம் ....!!!

என் 
இதய பூந்தோட்டம் ....
வாடி வருகிறது ....
எப்போ வருவாய் ,,,,?
நீர் ஊற்ற .....?

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
-----------
நானும் அனாதைதானே.....
நீ விட்டு பிரிந்த நொடி ....
காதல் முதியோர் இல்லத்தில் ....
முடங்கி போய் இருக்கிறேன் ...!!!

இறைவா எனக்கு ....
மரணத்தை கொடுத்துவிடு ....
என் கல்லறையில் அவளின் ....
மூச்சுகாற்று படட்டும் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
----------
நானும் 
நீயும் கை கோர்த்து .....
திரிந்த காலமெல்லாம் ....
கைவிரிச்சு போச்சு ....!!!

உன்னோடு பேசிய ....
வார்த்தையெல்லாம் ....
வீண் பேச்சாய் போச்சு .....!!!

என் இதயம் முழுதும் ....
நிறைந்திருக்கும் ....
நினைவுகள் மட்டும் ...
ஊற்று நீராய் ஊறுதடி ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
----
இரத்தம் வெளியில் ....
வராமல் என் இதயத்தை ....
கிழித்து சென்று விட்டாய் ...
பாவம் இதயம் நீ வருவாய் ...
என்று தவமிருக்கிறது ....!!!

காதல் உடலுக்கும் ....
உள்ளத்துக்கும் நன்மை ....
எனக்கேன் நீ விஷமாக்கினாய் ...?
உன் விஷமருந்தியும் ....
இறக்காமல் இருக்கிறேன் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
----
எத்தனை  முறைதான் ...
என்னை பிடிக்காதத்துபோல் ...
நடித்துகொண்டிருப்பாய் ....
தயவு செய்து மௌனத்தை ...
உடைத்து எறிந்துவிடு ....!!!

ஒன்றை மட்டும் நினைவு ....
படுத்திக்கொள் - உனக்கு ...
காதல் வலியே வராது ....
உன் இதயம் என்னிடம் ....
இருப்பதால் ......!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,