வலிக்கும் இதயத்தின் கவிதை 61-70

நான் பழகுவதற்கு
எத்தனையோ மனங்கள் ....
இருக்கலாம் - ஆனால் 
நான் மனம் விட்டு பேச .....
உன்னைவிட்டால் யார் ...?

காதல் கண்ணில் தோன்றி ....
கண்ணில் மறைபவர்களுக்கு ....
காண்பதெல்லாம் காதல் .....
என் இதயத்தில் தோன்றி ....
என் இதயம் வரை இருக்கும் ....
பாக்கியம் உன்னைவிட்டால் யார் ...?

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
-------
கண்களால் ஜாடைசெய்தால் ...
காதலில் தவிர்க்க விட்டாள் ....
காதலின் வலியென்ன ...?
கண்ணீரால் பதில் சொல்கிறாள் ....!!!

அவளின் இதயம் என்னிடத்தில் 
அவள் எப்படி உயிர் வாழ்கிறாளோ ....?
நான் வாழ்கிறேனே ......
என் இதயம் அவளிடம் ...!!!

நான் கல்லறையில் இருக்கிறேன்
அவளின் கல்லறையை எதிர்க்கிறேன்..
வேண்டாம் வேண்டாம் அவள் வேண்டாம் ...
அவளாவது வாழட்டும் காதலோடு ....
எனக்கும் சேர்த்து சில காலம் ..............!
--------
நீ என்னை பார்த்து ......
சிரித்த நாட்களைவிட ..
நான் உன்னை நினைத்து 
அழுத நாட்கள் தான் அதிகம் ..!!!

காதலில் வலி இல்லை ...
காதலில் வலி சுகம் ...
காதலில் வலியும் சோகமும் ....
காதலின் அசையா சொத்துகள் ....!!!

நம் காதலை சிந்தித்த ....
கணப்பொழுதை காட்டிலும் ....
கண்ணீர் சிந்திய கணப்பொழுது ....
அதிகரித்துக்கொண்டே செல்கிறதே ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
--------
விடலை பருவத்தில் 
குடிக்கும் விஷம் ...
காதல் விஷம் ....!!!

மெல்ல கொல்லும்...
மனிதனை காதலும் ....
சோதிடமும் ....!!!

உடனே கொல்லும் ....
அவளின் மௌனமும் ....
பாராமுகமும் .....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
--------
பட்டுப்போன மரத்தை .....
பட்டாம் பூச்சிகள் 
விரும்பவதில்லையே ....?

என் செத்துப்போன .....
இதயத்தில் உனக்கென்ன ....
வேலை ....?

அழகான மீனை ....
கருவாடாக்கியபின்.....
என்னோடு நீச்சலுக்கு ....
ஆசைப்படுகிறாயே ...?

பட்டுப்போன மரம் ....
விறகாகும் .....
செத்துப்போன இதயம் ...?
பதில் சொல் காதலே ....? 

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
-----
காதல் ...
இதயத்தில் வளரும் ...
தேன் கூடு .....!!!

சின்ன சின்ன ....
நினைவுகளால் ....
கனவுகளால் ....
கட்டப்படும் தேன் கூடு ....!!!

யார் நம் காதலை ....
கலைத்து விட்டது ...?
காதலரே காதல் தேன் ....
கூட்டில் கல்லெறிய 
அனுமதிக்காதீர் ....!!!

கல்லெறி வாங்கியவன் ...
கண்ணீரோடு சொல்கிறேன் ....
காதல் ஒரு சாம்ராச்சியம் ....
இன்னொருவரை அனுமதிக்காதீர் ....!!!

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
-----
கூலி வேலை செய்தேன்
உன் வீட்டில் 
யார் கண்டது நீ 
கண்ணில் படுயென்று ...?

கூலிக்கும் உன்மீது ஆசை .....
உனக்கும் என்மீது ஆசை ...
கூடி ஒருநாள்கூட போசமுடியாத -
தினக்கூலினான் ....!!!

வீட்டுவேலை முடிந்ததும்....
முடிந்தது என் காதல் ....
கண்ணே முடியவில்லை ...
உன் நினைவுகளை மறக்க ....
முடியவில்லை யாருக்கும் சொல்ல ....?

கூலிக்கு தேவையா? 
இந்தக்காதல் என்பார்கள் . ...
கூலிக்கும் இதயம் இருக்கு ....
என்று ஏன் புரிவதில்லை ....
இந்த உலகத்துக்கு ....
கூலிக்கும் காதல் வரும் -என்று 
இன்னுமொரு கூலிக்கு புரிந்தால்....
என் காதலுக்கு உயிர் இருக்கும் ...!!!

------
வெட்ட வெளியை வேடிக்கை 
பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை 

நான் திரிந்த இடங்கள்
திமிர் கொண்டு நடந்த இடங்கள்
என் உறவுகள் நடந்த இடங்கள் 
எங்களையார் கேட்பார்கள் 
என்று வீராப்புடன் திரிந்த இடங்கள் 
இப்போ வெட்ட வெளியாக இருக்கிறது 

வெட்ட வெளியை வேடிக்கை 
பார்ப்பதாகிவிட்டது -என் வாழ்க்கை

---
இறைவா ...!!!
என் இதயத்தை ஏன்..?
மென்மையாக படைத்தாய்...
ஏளனம் செய்கிறார்கள்...
ஏமாற்றுகிறார்கள்.....!!!

கையால் ஆகாதவன் என்கிறார்கள்
கோழை என்கிறார்கள்
நான் மென்மையான
இதயத்தில் பிறந்தது
குற்றமா ..?-இல்லை
மற்றவர்கள் -வன் இதயத்தை
கொண்டவர்களா ...?

பொறுத்த மில்லாத -என்
இதயத்தை மாற்று
நானும் சமூகத்தில்
இணைந்து வாழ்வதற்கு ....!!!

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
-----
தேடினேன்
தொலைந்து விட்ட இதயத்தைத்
தேடினேன்!

மேகத்தைத்தூது விட்டு
நிலவினில் தேடினேன்!
அலையினைத்தூது விட்டு
கடலினில் தேடினேன்!

தென்றலைத்தூது விட்டு
காற்றினில் தேடினேன்!

கிடைத்திடாக் கவலையால்
தரையினில் தேடினேன்!

அவள் வீட்டு
வாசல் முன் கிடந்தது!

வீசியெறிந்தக்குப்பையாய்
என் இதயம்........

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,