என்னவளே என் கவிதை 11-20

நீயும் நானும் ....
காதல் பாதயாத்திரை ....
செல்வோம் வாராயா ....?
உன் பெயரை நானும் ....
என் பெயரை நீ ....
உச்சரிப்பதே நம் ...
காதல் பஜனை கீதம் ...!!!

என்னை நீ பார்ப்பதும் ...
உன்னை நான் பார்ப்பதும் ....
காதல் ஆராதனை ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 11

----
எனக்கு காதல் பிடிக்காது ....
காதல் என்றாலே கசப்பு ....
வேலையில்லாதவன் ....
செய்யும் வேலையே காதல் ....!!!
இப்படி சொல்பவரெல்லாம் ....
உன்னை பார்க்காதவர்கள் .....!!!

உன்னை பார்த்தபின் காதல் ....
வரவில்லையென்றால் ...
பிறப்பிலேயே அர்த்தமில்லை ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 12

----
பாம்பின் வாயில் அகப்பட்ட ....
தவளைபோல் வாழ்கிறேன் ...
உன்னை பார்க்காமலும் ...
பேசாமலும் தவிர்க்கிறேன் ...!!!

நிச்சயம் சொல்வேன் ....
நான் போதைபழகத்துக்கு ....
ஆளாகமாட்டேன் ....
போதையாக நீ இருப்பதால் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 13

----
ஏய் என் கவிதைகளை ....
காகிதக்கப்பல் செய்து ....
விட்டிருக்கிறாய் போலும் ....
இரண்டு கப்பல்களும் ...
ஒன்றை ஒன்று உரசுகின்றன ...!!!

தயவு செய்து அவற்றை ...
பிரிக்காதே - நானும் நீயும் 
அல்லவோ அவை ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 14

-----
உனக்கு எழுதிய கவிதையை ....
பார்த்துவிட்டு - தங்களுக்கும் ...
கவிதை எழுதப்பழக்கி விடுங்கள் ...
என்கிறார்கள் ....!!!

கவிதை 
எழுத பழகதேவையில்லை 
காதலித்தால் போதும் கவிதை ...
அருவியாய் கொட்டும் என்றேன்...
நான் என்ன கவிஞனா ....?
இல்லையே - காதலித்தேன் ....
எழுதுகிறேன் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 15

-----
நீ 
ஓடி வரும்போது ...
காற்று உன்னை நன்றக ....
தழுவுகிறது .....
காற்று கொடுத்துவைத்தது ....!!!

நீ 
மூச்சு வாங்கும் போது ....
எனக்கு பேச்சே 
நின்றுவிடும்போல் இருக்கிறது ....
உன் மூச்சில்லாவிட்டால் ....
எனக்கு பேச்சேது ....?

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 16

------
உன் 
பார்வை கிடைக்காத ....
இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ....
வருத்தப்படும் வாலிபர் சங்கம் ...
உருவாக்கப்போகிறார்களாம் ...!!!

உன் 
பார்வை பட்ட நானோ ....
வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதை ....
நீ அறிவாயோ ...?
எப்போது அறிவாயோ ....?

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 17

-----
நீ 
பூக்களின் ராணி ....
நீ வரும் வழியெல்லாம் ....
பூக்கள் உனக்கு ...
தலைவணங்குகின்றன .....!!!

வீதியிலே ....
பூக்கள் வாடிவிழுந்துள்ளன ....
என்று நினைக்காதே ...
உன் பாதங்களில் அவை ....
தொடவேண்டும் என்பதற்காக ....
தானாக உதிர்ந்தன ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 18

----
எத்தனை முறைதான் ....
ஏமாறுவது -நீ நீ என்று ....!
பெண்கள் எல்லாம் ....
நீயாக தெரிய என்ன ....
ஜாலம் செய்கிறாய் ...?

நண்பன் டேய் ...
என்று கூப்பிடால் கூட ...
நீ அழைப்பதுபோல் ....
இருப்பதற்கு என்ன ....
மாயம் செய்தாயோ ...?

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 19

-----
எனக்கு அவள் அழகு ....
தங்க,, வைர,, முத்து ....
என்று சொல்லிக்கொண்டு ....
போகலாம் ....!!!

இத்தனை அழகாக ....
தெரிவது அவள் அங்கம் அல்ல .....
அவளில் நான் காணும் காதல் ....
அவளிடம் காதல் நிரம்பியுள்ளது ....
என்னிடம் காதல் மித மிஞ்சியுள்ளது ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 20

-----

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,