இனியவன் மின்மினிக் கவிதைகள் 21-30

இத்தனை காலமும் 
என் துன்பத்துக்காக ....
நான் கண்கலங்கியதே...
இல்லை .....!!!

கலங்க விடவில்லை ...
என் நண்பன் ....
ஒருமுறை அவன் 
துன்பத்துக்காக கண் ...
கலங்கினேன் ...
எத்தனை வலிகளை...
தாங்கியிருகிறான்...
எனக்காக ....
வலிக்குதடா நண்பா .....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
நட்பு கவிதை 
கவிப்புயல் இனியவன்
-----
காத்திருப்பேன் 
விழித்திருப்பேன் ...
பொறுத்திருப்பேன் ....
தனித்திருப்பேன் ...
அவனுக்காக ....
உயிரும் துறப்பேன் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
நட்பு கவிதை 
கவிப்புயல் இனியவன்
-----
நட்பு 
என்னும் விதையை ...
எங்கு தூவினாலும் ....
வளரும் ....
நட்புக்கு வரண்ட ...
பிரதேசம் என்று ஒன்று ...
இல்லவே இல்லை ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
நட்பு கவிதை 
கவிப்புயல் இனியவன்
----
நான் 
எப்போதுமே தனியே ....
வாழ்ந்ததில்லை ....
நண்பணின் நினைவுகள் ...
எப்படி தனியே வாழவிடும் ....?

தனியே 
எங்கும் போனதுமில்லை ....
நிழலாக நண்பன் 
வந்துகொண்டே இருக்கிறான் ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
நட்பு கவிதை 
கவிப்புயல் இனியவன்
----
காதலுக்கு பொய் ...
துன்பத்தை ஏற்படுத்தும் ...
நட்புக்கு பொய் ...
இன்பத்தை ஏற்படுத்தும் ...
உண்மையாக இருந்தாலும் ...
பொய் தானே என்றுவிட்டு 
போவான் நண்பன் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
நட்பு கவிதை 
கவிப்புயல் இனியவன்
----
உலகில் எந்த அழிவு ....
வந்தாலும் அழியவே ...
அழியாது -முதல் காதல் ....!!!

எத்தனை அழகை கண் ...
பார்த்தாலும் முதல் 
காதலின் அழகை வெல்ல ...
இல்லவே இல்லை அழகு ...!!!

^^^

மின் மினிக் கவிதைகள் 
( சோக துளிகள்) 
கவிப்புயல் இனியவன்
----
காதலோடு இருங்கள் 
காலமெல்லாம் இன்பம் ...
காதலியோடு இருந்தால் ....
காலமெல்லாம் ......?

காதல் வெற்றி பெற....
விட்டு கொடுங்கள் ...
முடிந்தால் காதலையே ...
விட்டு விடுங்கள் ....!!!

^^^

மின் மினிக் கவிதைகள் 
( சோக துளிகள்) 
கவிப்புயல் இனியவன்
-----
நீ - தந்த 
வலிகளை மறக்கவே ....
தினமும்...... 
கவிதை எழுதுகிறேன் ....
கவிதையின் வரிகள் ...
கண்ணீர் விடுகின்றன ....
பரவாயில்லை ....
கவிதையே என்னை ....
வாழவைத்துக்கொண்டு ...
இருக்கிறது ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
---
கண்ணீர் ஒன்று ...
இல்லையென்றால் ....
காதலின் வலியை....
உனக்கு எப்படி ...
தெரிவிப்பேன் ...?

கவிதை..... 
இல்லையென்றால் ...
என் கவலைகளை ....
உனக்கு எப்படி ...
எடுத்துரைப்பேன் ...?

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
----
பூவை போல் 
மென்மையானவளே....
பூவைப்போல் மௌனமாய் ....
என்னை கொல்லாதே ....!!!

அழகிய பூவை 
நீதான் கொடுத்தாய் ....
அழகாக வைத்திருப்பதும் ....
உத்திர வைப்பதும் ...
உன்னிடம் தான் இருக்கிறது ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,