காதல் நினைவுகளும் காதல் டைரியும் 11-20

என்னவளின் டயறியிலிருந்து ...11
------
அன்று நான் கோயிலுக்கு ....
செல்லும்போது தூரத்தில் ....
இருந்து அருகில் வந்து ...
ஏதோ சொல்ல எத்தனித்தாய் ....
அதற்குள் அப்பா அருகில் ...
வந்ததால் நீ துடித்த துடிப்பை ....
நினைக்கும்போது கவலையா ...
இருந்ததடா - சாமியை கூட ....
வணங்க மனம் வரவில்லை ....
என் சாமி நீ துன்ப பட்டதால் ...!!!
+
இப்படிக்கு உன்னால் 
உருகும் இதயம் 
இனியவள் 
என்னவளின் பக்கம் 11
----
என்னவளின் டயறியிலிருந்து ...12
-----
எனக்கும் உனக்கும் ....
திருமணம் ஆகாவிட்டால் .....
கவலையில்லை - என் 
தோழியின் கல்யாணத்தில்....
நான் மணப்பெண்ணாகவும் ...
நீ மாப்பிள்ளையாகவும் ...
காட்சி தந்த அந்த அழகு ....
இந்த நிமிடம் வரை இனிக்கிறது ...!!! 

+
இப்படிக்கு உன்னால் 
உருகும் இதயம் 
இனியவள் 
என்னவளின் பக்கம் 12
----
என்னவளின் காதல் டயறியிலிருந்து-13
உனக்கும் எனக்கும் ...
திருமணம் நடக்காமல் ....
விடுவதற்கு வாய்ப்புக்கள் ....
அதிகரித்து கொண்டே...
செல்கிறது .....!!!

உன் அருகில் வரும் ...
வாய்ப்பும் நழுவுகிறது ....
உன் பெயருக்கு அருகில் ...
வாய்ப்பும் நழுவுகிறது ....
ஆசையை நிறைவேற்றுகிறேன் ...
டயறியில் என் பெயருக்கு ...
அருகில் உன் முதலெழுத்து.... 
போடுகிறேன் ....!!!

&

....என்னவளின் காதல் டயறியிலிருந்து....
..............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................
----
என்னவனே 
உன்னோடு வாழ்ந்த நாள் 
மிக சொற்பம் 
உன் நினைவோடு 
வாழ்ந்த நாள் அதிகம் 
என்பதை என் டயரி 
சொல்லும் பார் ....!!!

இடை இடையே ...
எழுத்துகள் அழிந்திருக்கும் ...
என்னசெய்வது கண்ணீருக்கு ...
தெரியவில்லை ....!!!

^
என்னவளின் காதல் டயரியிலிருந்து
என்னவளின் பக்கம்- 14
----
காதலில் 
தான் பொய்யும் அழகு 
களவும் அழகு ...
என் வீட்டுக்கு முதல் ...
முதலில் வந்தபோது ...
இரண்டையும் செய்தாய் ....!!!

இதயனே....
உன் அருகில் பேருந்தில் ...
இருக்கும் பாக்கியத்தை ...
பெற்ற அன்று உன்னோடு ....
வாழ்துவிட்ட இன்பம் ....
இன்றும் அந்த பேருந்தை ...
திட்டுகிறேன் விரைவாக ....
ஓடியதுக்கு ....!!!


^
என்னவளின் காதல் 
டயரியிலிருந்து
என்னவளின் பக்கம்- 15
-----
உன் .....
இதயத்தில் பெரிய ....
காயத்தை ஏற்படுத்தி விட்டேன் ....
எப்படி தாங்குவாய் இதயனே,,,,?
காலம் எம்மை பிரிகிறது ....
காதல் எம்மை கொல்கிறது....
எனக்கு ஒரே ஆசை ....
இந்த டயரி எழுதி முடியும் ...
நாளில் நானும் ..........?

இதயனே -நீ 
அடிக்கடி பாடும் பாடல் ...
" உன்னை நான் பிரிந்தால் ....
உனக்கு உன் இறப்பேன் "....
*
*
*
வலிக்குதடா அந்த வரிகள்....!!! 

^
என்னவளின் காதல் டயரி
என்னவளின் பக்கம்- 16
கவிப்புயல் இனியவன் 
----
என்னவனே ,,,,
எனக்கு முதல் முதல் ...
வாங்கி தந்த மோதிரம் ....
இப்போ இறுக்கமாய் இருக்கு ....
நான் தான் உன்னை விட்டு ....
விலகி செல்கிறேன் .....!!!

என் பாடப்புத்தகத்தை ....
எடுத்து இருதிபக்கதில் ....
ஒரு கவிதை எழுதினாயே .....
கல்வி என்னும் பயிருக்கு ....
கண்ணீர்தான் மழை .....
இப்போதான் புரிகிறது ....
காதலும் கண்ணீரில் ....????
^
என்னவளின் காதல் டயரி
என்னவளின் பக்கம்- 17
கவிப்புயல் இனியவன் 
---
பள்ளி பருவத்தில் ....
கல்வி சுற்றுலா போனோம் .....
மற்றவர்கள் எல்லோரும் ....
சுற்றி பார்த்தார்கள் ...
நீ என்னை சுற்றி சுற்றி ....
வந்தாய் ,,,,,,,!!!

எனக்கு சிறிதாய் 
காலில் கல் அடிபட்டது ....
துடித்துப்போனாய் ....
இன்று உன் இதயத்தில் ...
காயத்தை தந்துவிட்டேன் ....
என்ன பாடுவடுவாய் ....
மன்னித்து விடு மன்னவா ....!!!

^
என்னவளின் காதல் டயரி
என்னவளின் பக்கம்- 18

கவிப்புயல் இனியவன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05