வலிக்கும் இதயத்தின் கவிதை 121-130

தோள் கொடுக்க....
உயிர் காதலாய் ....
இருக்கும் வரை
தோல்விகள்....
தோல்வியல்ல .....!!!

தோல்விகள்....
ஆயிரம் ஆயிரம்...
தோன்றினாலும்...
துவண்டு விழேன்....
என்றிருந்த என்னை ...
விழ வைத்துவிட்டாய் ....
உன்னை இழந்ததை விட ...
தோல்வியே இல்லை....!!!

+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
------
நீ 
என்னை
வெறுத்துவிட்டாய் ....
அதை நினைத்து 
நான் கண்ணீர் ....
சிந்தவில்லை ....!!!!

நீ 
வெறுக்கும் அளவுக்கு ....
நான் உன் காதலை ....
வேதனை படுத்திவிட்டேன் ...
அதை நினைத்தே கண்ணீர் ....
வடிக்கிறேன் ....!!!

+
கண்ணீர் கவிதை 
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
----
காதலால் கண்ணீர் ....
வருகின்றது எனில் ...
காதல் தூசு போல் ....
மாறிவிட்டதோ ....?

உன்னை நினைத்து ...
அழுவது என்ன என் ....
கடமையா ....?
உன்னை நினைக்கும் ....
போது கண்ணீர் வர ...
வைத்தவள் -நீ 

+
கண்ணீர் கவிதை 
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
----
இதயத்தை ...
கொஞ்சம் மென்மையாக்கி....
ஒருமுறை மெல்ல கண் மூடி ...
என்னை நினைத்துப்பார் ....
உன் விழியோரத்தில் ....
நிச்சயம் வடியும் கண்ணீர் ....!!!

உன்னை 
ஒவ்வொரு நாளும் ....
பார்த்த குற்றத்துக்காய் .....
என் கண் தன்னையே....
வருத்தி விடும் வலியின் ....
திரவமே கண்ணீர் ......!!!

+
கண்ணீர் கவிதை 
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்
----
உன்னோடு .....
பேச சந்தர்ப்பம் கிடைத்த....
போதெல்லாம் உன்னை....
பார்த்துகொண்டிருந்தால்....
போதும் என்று பேசாமல்....
போய்விடுவேன்.....!!!

தனியாக ....
சந்திக்கும் வாய்ப்பு...
கிடைத்தபோதெல்லாம்....
உன்னை சிந்தித்தாலே....
போதும் என்ற சிந்தணையில்...
சென்றுவிடுவேன்.....!!!

விளைவு .....
இன்னொருத்தியுடன் நானும்....
இன்னொருவனோடு நீயும்....
காதலை இழந்து வாழ்கிறோம்....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
----
நீ 
என்னை பார்த்தவுடன் ...
உடலால் விலகி போகிறாய் ...
உள்ளத்தால் உன்னால் ...
விலகி போகவே முடியாது ....!!!
விழிகளில் என்னை சுமர்ந்தவளே ...
வலிகளோடு ஏனடி வாழுகிறாய் ...?

நீ 
வலியோடு வாழுகிறாய் 
நான் 
வலியோடு எழுதுகிறேன் 
நம் 
காதல் வலிக்காமல் இல்லை 
^
கவி நாட்டரசர் 
கே இனியவன் 
-----
என் ....
சோகம் என்னோடு .....
இருந்துவிட்டு போகட்டும் ....
எல்லாம் முடிந்துவிட்டது ...
என்று மனத்தால் நினைத்து ....
வாழ்ந்துகொண்டிரு .....!!!

காதல் இல்லாத இடத்தில் ...
காதல் சொன்னால் .....
கல்லெறி விழத்தான் செய்யும் ...!!!

&

நீ 
காதலை இழந்து வாழ்கிறாய் 
நான் 
காதலோடு வாழ்கிறேன் 
நம்மை 
வலிகள் ஆண்டுகொள்ளட்டும் .....!!!
^
கவி நாட்டரசர் 
கே இனியவன் 
-----
நீ 
தந்தவலிகலால்....
உன்னை எப்போதோ ....
பிரிந்திருப்பேன் ....!!!

நல்லவனாக உனக்கு ...
தெரியும் காலத்தில் .....
நான் பிரிந்தால் -நீ 
காலமெல்லாம் கவலை ...
படுவாய் என்பதால் ....
என்னை கெட்டவனாக ....
நீ நினைக்கும் காலத்தில் ....
பிரிகிறேன் ....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
----
ஆயிரம் கவிதையை ....
வலியோடு எழுதினாலும் ....
அரைவாசி வலியையே....
எழுத முடிகிறது .....!!!

கடுமையான வலியை....
எழுத மனம் துடிக்கும் ....
வரிகள் போட்டி போடும் ....
இதயம் தடுக்கும் .....
அதற்குதானே உன்னை ....
வைத்திருந்த வலி புரியும் ....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
----
நீ .....
தந்த வலியால்... 
உடல் முழுவதும் ... 
மறுத்து விட்டது ... 
இதயம் கொஞ்சம் ஈரமாக .. 
உள்ளது நீ என்னை .. 
புரிந்து கொள்வாய் ....
விரும்பிகொள்வாய் ...!!!

உன் 
மெளனத்தை கலைத்து 
வெகு தூரம் சென்று.... 
திரும்பிப் பார்.....
உன் நினைவுகளால் ....
நெருப்பாய் நான் ..
எரிந்துகொண்டிருப்பதை ....!!!

+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,