வலிக்கும் இதயத்தின் கவிதை 161-170

என்னவளே ......
உயிரற்ற ஓவியமாக்கி ......
உணர்வற்ற உடலாக்கி ......
செயலாற்ற மனிதனாகி ....
உன்னால் அலைகிறேன்....!!!

மற்றவர்கள் என்னை .....
காதல் பைத்தியம் ....
என்கிறார்கள் ....
சொல்லிவிட்டு போகட்டும் ......
நீ அப்படி நினைத்து விடாதே .....!!!

முடிந்தால் எனக்கு ...
ஒரே ஒரு உதவி செய் .....
எனக்காக ஒரு துளி .....
கண்ணீர் விடு ......
அதை விட எனக்கு ......
உன்னிடம் இருந்து வர .....
ஒன்றுமில்லை ..........!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
-----
உன்னை மறப்பதற்கு .......
என்னை மறக்கவேண்டும் .....
என்னை மறப்பதற்கு .....
உன்னை மறக்க வேண்டும் ......
என்ன சொல்கிறேன் என்று .....
புரியவில்லையா ......?
எனக்கும் புரியவில்லை .....
உன்னை எப்படி மறப்பது ....?

முடிந்தால் ஒரு உதவி செய் .....
என்னை நீ மறக்க என்ன .....
செய்தாய் ...? சொல் உன்னை .....
மறக்க நான் முயற்சிக்கிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
-----
நீ ...
எனக்கு ...
கிடைக்க போவதில்லை .....
உறுத்தியாகி விட்டது .....
அறுதியான நம் காதல் .....!!!

என்னதான் ......
சொன்னாலும் .....
உன்னை கண்டவுடன் .....
பாழாய் போன மனசு ......
உன்னுடன் பேச துடிக்கிறது .....
அற்ப ஆசையுடன் .....
ஏங்குகிறது .........................!!!

+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
----
கலைந்தே ....
போனாலும்.....
மறப்பதில்லை...
நீ வந்துபோன....
கனவுகள். . !

நீ 
பிரிந்தே போனாலும்.....
விழியோரம் கலையாமல்....
நீ தந்த நினைவின் ....
வலிகள் ........!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
----
உன்.... 
நினைவு இல்லாத ....
தேசம் எது சொல் ......
அங்கே சென்று ....
விடுகிறேன்..............!!!

உன் ....
நினைவுகளின் ...
வலியை .......
என் இதயத்தால்
சுமந்து கொண்டு ....
உன் முன்னே .....
வாழ முடியவில்லை .....!!!
----
நீ 
உண்மையோ ....
பொய்யோ....
பேசினாலும் .....
ரசிப்பேன் ......!!!

எத்தனை ...
முறை அடித்தாலும்...
தாய்மடித் தேடும் ...
பிள்ளையாய்...
உன்னை மட்டுமே ...
தேடுவேன்...
உயிர் உள்ள வரை,....!!!

நீ 
பார்வையில் இருந்து 
விலகி செல்லும் ....
போதெல்லாம் ....
கண்களுடன் .......
போராடுகின்றது,..
கண்ணீர் .....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
----
பெற்ற .....
தாயின் இழப்பு ...
ஒருபுறம் கண்ணீரை ....
கொண்டு வருகிறது ...!!!

நீ பிரிந்து சென்ற ..
வலி கண்ணீரை ..
தருகிறது ...!!!
இரண்டையும் இரு ..
கண்களாக விரும்பினேன் ..
என்பதற்காக ...
என் இரண்டு கண்ணும் ..
அழுகிறது ..!!!

நிச்சயம் சொல்வேன் ...
வரும் துளிகளில் ...
ஒருதுளி நீ ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
-----
நீதான் என் வாழ்வு....
நீதான் என் காதல்....
நீதான் என் சந்தோசம்....
நீதான் என் சோகம்....
நீயின்றி போனால் .....
வாழ்வில்லை.......
என்றிருந்தேன்...!!!

இப்போ ....???
குரல் கேட்க ஆசை தான்..
ஏனோ கேட்க மறுக்கிறேன்....
முகம் பார்க்க ஆசை தான் ..
ஏனோ பார்க்க மறுக்கிறேன்..
உன்னுடன் பேச ஆசை தான்..
ஏனோ பேச மறுக்கிறேன்...
அத்தனை வலிகளை தந்து ....
மனதில் இரக்கத்தையே .....
கொன்று விட்டாய் ...........!!!

+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
-----
நீ 
செய்யும் கொலைகளும் ...
கொள்ளைகளும்...
எந்தப்பத்திரிகையிலும் ...
வருவதில்லை ...!!!

தினமும் என்னை ......
சித்திரைவதை செய்கிறாய் ...
இதயத்தை கொள்ளையடித்தாய் ...

பேசாமல் இருந்து 
கொலையும் செய்கிறாய் ...!
உன் பத்திரிக்கை சுதந்திரம் .....
பாசிச அரசோ ...?

+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
----
நீ 
என்னை மறந்ததை ....
நினைத்து கவலைப்படவில்லை .....
நீ மறந்து விட்டாய் என்று ....
பல முறை இதயத்துக்கு ....
சொல்லி விட்டேன் .....
இன்னும் இதயக்கதவை ......
திறந்து காத்துக்கொண்டு ....
இருக்கிறது ..............!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,