வலிக்கும் இதயத்தின் கவிதை 141-150

பிரிவை விட கொடுமை .....
காதலில் மௌனம் ......
மௌனத்தை விட கொடுமை ....
காதலில் சந்தேகம் ....!!!

உன்னை கனவில் ....
மட்டும் காதலித்திருந்தால் ....
கலங்கியிருக்க மாட்டேன்....
நினைவில் மட்டும் ....
காதலித்திருந்தாலும் .....
கலங்கியிருக்க மாட்டேன்....!!!

உன்னை உயிராய் 
காற்றாய் காதலித்து .....
அவஸ்தைப்படுகிறேன் .....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
---
பிரிவை விட கொடுமை .....
காதலில் மௌனம் ......
மௌனத்தை விட கொடுமை ....
காதலில் சந்தேகம் ....!!!

உன்னை கனவில் ....
மட்டும் காதலித்திருந்தால் ....
கலங்கியிருக்க மாட்டேன்....
நினைவில் மட்டும் ....
காதலித்திருந்தாலும் .....
கலங்கியிருக்க மாட்டேன்....!!!

உன்னை உயிராய் 
காற்றாய் காதலித்து .....
அவஸ்தைப்படுகிறேன் .....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
நீ 
என்ன இருதய மாற்று 
சிகிச்சையாசெய்து 
விட்டாய் ..?

இத்தனைகாலம் பழகி 
எத்தனையோ நினைவுகளை 
தந்துவிட்டு ..

எதுவுமே இல்லததுபோல் ..
தலையை குனிந்துகொண்டோ 
செல்லுகிராயே நீ என்ன ?
இருதய மாற்று ....
சிகிச்சையா செய்து விட்டாய் ?

---

ஏனடி 
பிரிந்த பின் இவ்வளவு 
அன்பு காட்டுகிறாய் .................?

உன்னோடு 
இருந்தபோது இவ்வளவு 
அன்பை காட்டவிலையே .......?

இருந்த போது 
நான் பட்ட துன்பத்தை விட 
பிரிந்த பின் துன்பம் 
சுகமாக உள்ளது ....!!!

பிரிந்து 
இருந்து அன்பு காட்ட
வேண்டாம்!

நீ அருகில் 
இருந்து சண்டை போடு
அது போதும்!!!...
----
காதலை 
சொல்லவேண்டிய ....
நேரத்தில் சொல்லி விடு ....
இல்லையேல் காலம் ....
முழுவதும் காதலால் ....
காயப்படுவாய் .....!!!

என்றோ ஒருநாள் ...
சொல்லாமல் விட்ட காதல் ....
இதயத்துக்குள் முள்ளாய் ....
குத்திக்கொண்டே இருக்கும் .....!!!

காதலை சொல்லி வேதனை ....
பட்டவர்களை விட காதலை ....
சொல்லாமல் வேதனை ....
பட்டவர்களே அதிகம் .....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
---
கைக்கு எட்டியது ....
வாய்க்கு எட்டவில்லை ...
என்பதுபோல் தான் ....
என் காதலும் .....
திருமண அழைப்பில் ....!!!

கை கோர்க்க முடிந்த ....
எனக்கு உன்னோடு ...
மாலை கோர்க்க ....
முடியவில்லை .............!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
----
கைக்கு எட்டியது ....
வாய்க்கு எட்டவில்லை ...
என்பதுபோல் தான் ....
என் காதலும் .....
திருமண அழைப்பில் ....!!!

கை கோர்க்க முடிந்த ....
எனக்கு உன்னோடு ...
மாலை கோர்க்க ....
முடியவில்லை .............!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
-----
நேரம் 
இருக்கின்ற போது ....
என்னுடன் பேசுகிறேன் ...
என்கிறாய் ......
நேரம் காலம் எல்லாம் ....
உன்னையே நினைக்கும் ....
என்னிடம் சொல்கிறாயே .....!!!

ஒரு
முறை என்னைப்போல் .....
துடித்துப்பார் -காதலின் 
துடிப்பும் வலியும் அப்போது ....
உனக்கு புரியும் ......!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
----
முயற்சிக்கிறேன் ....
உன்னை கண்டவுடன் ....
ஒரு பொய் சிரிப்பு சிரிக்க ....
உதட்டுக்கு முன்னரே ....
முந்தி கொண்டு ..
கண்ணீர் விட்டுவிடுகிறது .....
கண்கள் .......!!!

உன்னை நினைக்க .....
கவலையாக இருக்கிறது......
என் நினைவுகளை எப்படி ....
மறக்கப்போகிறாய் ....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
-----
கனவில் வந்து ...
கலைந்து விட்டாள்....
நினைவை தந்து ....
நீங்கிவிட்டாள்....

உன்னை கனவில் ....
மட்டும் காதலித்திருந்தால் ....
கலங்கியிருக்க மாட்டேன்....
நினைவில் மட்டும் ....
காதலித்திருந்தாலும் .....
வருந்த மாடடேன் ....
உயிராக இருக்கிறேன் ....
முடிந்தால் எடுத்துவிடு....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
----
அன்று .....
கண் சிமிட்டாமல் 
உன்னைப் பார்க்க 
ஆசைப் பட்டேன்... 
பார்த்தேன் ......!!!

இன்று .....
இப்போதெல்லாம் ....
கண் சிமிட்டும் நேரமாவது ...
உன்னைப் பார்க்க ....
ஆசைப் படுகிறேன்...
கண்ணீர் மறைக்கிறது ..
உன் உருவத்தை .....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05