கே இனியவன் தன்னம்பிக்கை கவிதை 08

மரத்திலிருந்து விழும் ...
பழுத்த இலை சொன்னது ...
நான் எத்தனையோ முறை ..
வானத்தை தோட முயற்சித்தேன் ..
முடியவில்லை -என்றாலும் ..
கலங்கவில்லை .....!!!

என் அடுத்த ..
வாரிசு நிச்சயம் தொடும் ...
என் குழந்தை துளிர் ..
நிச்சயம் எட்டுவான் ...
தந்தை செய்து முடிக்காத ..
நாற்காரியத்தை -மகன் 
நிறைவேற்றியே தீரவேண்டும் ...!!!

+
கே இனியவன் 
தன்னம்பிக்கை கவிதை

-----
உன்னை 
ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை.... 
நீயே எல்லோரையும் ஜெயிக்க ....
பிறந்திருகிறாய்....!!!

உன்னால் ....
முடியாது என்பதை யாரோ ....
ஒருவன் முயற்சி செய்து வருகிறான் ....
முடியாது என்றசொல் உலகில் ....
கிடையாது ....!!!

கே இனியவன் 
தன்னம்பிக்கை கவிதை
-----
வெற்றி ஒரு விருட்சம் ....
வெற்றி வர வர வளர்ந்து ....
கொண்டே போகும் ....!!!

தன்னம்பிக்கையே ....
வெற்றியின் விதை ....
நன்றாக நாட்டிடு ....
தன்னம்பிக்கையால் ...
உரமிடு ....
வியர்வையால் நீர் ஊற்று ....
வெற்றி விருட்சமாய் ...
வளர்ந்து கொண்டே இருக்கும் ...!!!
----
என்னிடம் ...
குவிந்து கிடக்குறது.... 
தோல்விகள் ....
கலங்கவில்லை ....
தோல்வியை விட ....
குவிந்து கிடக்கிறது ....
தன்னம்பிக்கை ....!!!

தோல்விகள் 
தோன்றாவிட்டால் ...
தன்னம்பிக்கை என்ற ...
சொல்லே இல்லை ...!!!
----
மூக்கு இருக்கு என்பதற்காக ....
மூச்சு விடாதே - மூச்சு விடுபவை ....
எல்லாம் பிறப்பாகி விடமுடியாது .....
முயற்சியுடன் மூச்சு விடுபவையே ....
பிறப்பாகும் .....!!!
----
வீழ்வது தப்பில்லை எழாமல் இருப்பது தப்பு 
--------------
இழிவு ஒன்றிருந்தால் ...
உயர்வு ஒன்று இருக்கும் ....
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு 
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!

இறக்கம் ஒன்றிருந்தால் ...
ஏற்றம் நிச்சயம் இருக்கும் ...
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு 
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!

பள்ளம் ஒன்றிருந்தால் ...
மேடு ஒன்றிருக்கும் 
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு 
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!

தோல்வியொன்றிருந்தால் ....
வெற்றி நிச்சயம் உண்டு ....
வீழ்வது தப்பில்லை ...
எழாமல் இருப்பது தப்பு 
எழுந்து நில் நிமிர்ந்து நில் ....!!!
-----
கண்களைத் திறந்து பார் 
அனைவரும் தெரிவார்கள். 
கண்களை மூடிப் பார். 
உனக்குப் பிடித்தவர்கள் 
மட்டும் தெரிவார்கள்.....!!!

தோல்வியின் அடையாளம் 
தயக்கம்....!!!
வெற்றியின் அடையாளம் 
துணிச்சல்....!!!
துணிந்தவர் தோற்றதில்லை 
தயங்கியவர் வென்றதில்லை! 

கையில் ரோஜாக்களோடு 
கண்ணாடி முன் நில்லுங்கள்! 
இன்னொரு ரோஜாக்களைக் 
காண்பீர்கள்....
அது நீ ....!!!
------
தூர நோக்கங்கள் நிஜமாகும் 
காலம் உனக்கு துணையாகும் ... 
வாழ்கை ஒருநாள் வளமாகும் 
வானம் கூட வசமாகும் .....
இத்தனைக்கும் தோல்வியை ...
சகிக்கனும் .....
அவமானங்களை சுமக்கணும் ...
பொறுமையாய் இருக்கணும் ...!!!
----

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05