என்னவளே என் கவிதை 41-50

நீ 
தலைகுனிந்து .....
போகும் போதெல்லாம் .....
என் இதயம் வெடித்து ....
போகிறது ........!!!

ஒருமுறை என்னை .....
நிமிர்ந்து பார் ......
என்னை சுற்றி எத்தனை .....
பட்டாம் பூசிகள் .....
உன் நினைவோடு ......
பறப்பதை .....................!!!

&
என்னவளே என் கவிதை 41
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
****
நீ 
விடும் மூச்சு காற்றில் ....
என் இதயம் என்னும் .....
காதல் காற்றாடி பறக்கிறது ......!!!

எப்போது உன் காதல் ....
மூச்சை நிறுத்துகிறாயோ .....
அப்போது காற்றில் அறுந்த.....
காற்றாடி எங்கு போய் .....
விழும் என்று யாருக்கும் ....
தெரியாததுபோல் நானும் .....!!!

&
என்னவளே என் கவிதை 42
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
***
என் உடம்பில் ....
எத்தனை மறுக்கள்.....
எத்தனை மச்சங்கள் .....
என்று கேட்க்கிறாய் ....?

நீ 
என்னை கிள்ளிய ......
அத்தனை இடங்களிலும் .....
மறுக்கலும் மச்சங்களும்.....
தான் உயிரே .......!!!

&
என்னவளே என் கவிதை 43
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
---
எனக்கு அடுத்த ....
ஜென்மம் இருந்தால் ....
உன் அழகு சாதனா ....
பொருட்களாக பிறக்க .....
வரம் கிடைக்கணும் .....!!!

என்ன புண்ணியம் .....
செய்தவையோ .....?
உன் உதட்டிலும் ......
கருவிழியில் .....
கண்டபடி ......
விளையாடுகின்றன ....!!!

&
என்னவளே என் கவிதை 44
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
****
லியானோ டார்வின்சி ......
முன்னரே பிரிந்துவிட்டார் .....
உன் காலத்தில் ....
பிறந்திருந்தால் .......
நீ தான் உலக அழகியாய் ....
வரையப்பட்டிருப்பாய் .....!!!

சில வேளை உலகம் ....
அழிந்து மீண்டும் வந்தால் ......
நீ தான் உலக அதிசய பிறவி ....!!!

&
என்னவளே என் கவிதை 45
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
****
நீயும் நானும் ......
ஒரே குழாயில் .....
இளநீர் குடிக்க வேண்டும் ....
வயிறு நிரம்ப அல்ல ....
என் இதயம் நிரம்ப ......!!!

உன் அழகை ....
எல்லோரும் புகைப்படம் .....
எடுக்கிறார்கள் ....
நானும் எடுக்கிறேன் ....
ஒரே ஒரு கண் சிமிடலால் ....!!!

&
என்னவளே என் கவிதை 46
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
****
எத்தனை 
முறை கவிதை .....
எழுதுகிறேன் சம்மதம் ....
கேட்டு ............!!!

கவிதைக்கு 
பதில் சொல்கிறாய் ......
எனக்கு எப்போது பதில் .....
சொல்வாய் ......?

ஒருமுறை என்றாலும் .....
சொல்லிவிடு உன் கவிதையை ....
மட்டுமல்ல உன்னையும் .....
காதலிக்கிறேன் என்று ......!!!

&
என்னவளே என் கவிதை 47
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன் 
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
----
எனக்கு அழகு இருக்கா ....?
இல்லையா என தெரியாது ....
உன்னை காதலிக்கும் அளவு ...
உள்ளம் அழகாய் அழகாய் ....
இருக்கிறது .....!!!

இல்லையேல் ...
உடல் அழகை எனக்கு தா ...
உள்ளத்தின் அழகை நான் ....
தருகிறேன் காதல் என்றால் ....
பரிமாற்றம் தானே ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 48

----
நீ 
அருவிக்கு அருகில் எடுத்த ...
புகைப்படத்தை பார்த்தேன் ....
இரண்டு அருவிகள் போட்டி ...
போடுவதுபோல் இருந்தது ...
என்றாலும் நீ தான் அழகு ....
சந்திர மண்டலத்தில் அருவி ...
அழகுதானே ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 49

-----
உன்னோடு பேச -நீ 
வாய்ப்பு தருகிறாயில்லை...
உன்னருகே வரும் தோழியோடு ....
கதைத்தால் முறைக்கிறாய் ....
உன்னருகே காவலுக்கு வரும் ...
தங்கையுடன் பேசினால் ...
அவளையும் மிரட்டுகிறாய் ....
அப்போ உன்னோடு பேசும் ...
சந்தர்ப்பம் தான் எது ....? 

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 50

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,