இனியவன் மின்மினிக் கவிதைகள் 41-50

சிரித்து 
விட்டு சென்று விட்டாய்....
மற்றவர்கள் என்னை ....
பார்த்து சிரிக்க வைத்து ...
விடாதே ...!!!

உயிராய் காதல் செய் ...
என்று சொல்லவில்லை ....
உயிரையே வெறுக்கும் ...
காதலை செய்து விடாதே ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
----
பேசிய வார்த்தையை ...
காட்டிலும் - மௌனமாய் ....
இருப்பதே வலி அதிகம் ...!!!

உன்னை பார்த்தபோது ...
கண்ட இன்பத்தை விட ....
பார்க்காமல் மனதுக்குள் ...
காணும் காட்சியே இன்பம் ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 

கவிப்புயல் இனியவன்
----
சோகத்தை வெளிக்காட்ட ....
கண்ணீர் இல்லாவிடால் ...
இதயங்கள் வெடித்து 
சிதறி விடும் ....!!!

காதல் பிரிவை ...
யார் ஏற்படுத்துகிறார்கள் ...
என்பது முக்கியமல்ல ....
காதலை யார் புரியவில்லை ...
என்பதுதான் வேதனை ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
----
சண்டை 
போட்டு பிரிய ...
நாம் ஒன்றும் எல்லை ....
கோட்டில் இருக்கும் ...
எதிரிகள் இல்லை ...!!!

சண்டை போடாமல் ...
காதலிக்க நாம் ஒன்றும் ...
மண் பொம்மையும் இல்லை ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
----
நீ 
காதலில் தந்த பரிசு 
உன்னை நினைக்க ...
வைத்ததை விட ...
கண்ணீரால் நனைய ...
வைத்ததே அதிகம் ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
----
நீ 
மௌனமாய் இருக்கும் 
காலங்கள் நான் ...
மரணிக்கும் காலங்கள் ,,,,!!!

நீ 
பேசிய காலம் தான் ....
என் பேரின்ப காலம் ,,,,!!!

^^^
மின் மினிக் கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
---
என் 
இறுதி மூச்சில் 
இறுதியாசை ...
*
*
ஒரே பதில் ..
அவள் என்னோடு ...
ஒருமுறை-என்றாலும்
பேசவேண்டும் ....!!!
^^^
மின் மினிக் கவிதைகள் - 50
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,