வலிக்கும் இதயத்தின் கவிதை 171-180

முடியவில்லை ......
பிரிவை தாங்க
முடியவில்லை ......!!!

தெரியவில்லை ....
வேறுமுகம் எனக்கு....
தெரியவில்லை.....!!!

பிரியவில்லை ....
மனத்தால் நாம்...
பிரியவில்லை...!!!

புரியவில்லை நீ ....
ஏன் வெறுத்தாய் என்று ..
புரியவில்லை ...!!!

நம்புகிறேன் .....
மீண்டும் வருவாய் என்று ..
நம்புகிறேன் ...!!!

&
கவிப்புயல் இனியவன்
-------
கல்லூரியின் கடைசிநாள் ....
உன் பயணப்பொதியை....
தம்பி ஓடிவந்து தூக்கிறான்.....!!!

உன் அருகே இருந்துவர ..
உன் அம்மா இருக்கையை ....
சரிசெய்கிறார் .....!!!

இறங்கும் இடத்தில் ...
வரவேற்க உன் உறவினர் ...!!!

உன்னை அனுப்பிவிட்டு ....
நான் மட்டும் அனாதையாக ...
தனியே திரும்புகிறேன் ......!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
--------
உன் தொலைபேசி ...
அழைப்பு என்னை .....
சந்தேகிக்கவைக்கிறது ....???
என்னை .....
மறந்து விடு என்று ..
சொல்லியபின் மௌனமானாய் ...
அப்படிஎன்றால் நீ அழுகிறாய் ....!!!
உலகில் எந்த காதலர்கள் ..
அழாமல் காதலை மறுத்தார்கள் ...???
உன் தொலைபேசியில் ....
இருந்து வரும் கண்ணீர் ...
இதயத்தையே நனைக்கிறது ..!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
----
இப்போதுதான் ....
புரிகிறது -நீ 
என் இதயத்தை ....
கண்ணாடியாய் .....
பார்த்திருக்கிறாய் ......!!!

அதுதான் அப்பப்போ ....
வந்து உன்னை அழகுபடுத்த .....
என்னை பயன்படுத்தி .....
இருக்கிறாய் .........!!!

நான் என்னுள் நீ 
காதல் செய்கிறாய் .....
என்று கற்பனையில் .....
வாழ்ந்துவிட்டேன் ......!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
----
என்னுயிரே 
உனக்கேன் இவ்வளவு சோகம் ...?
நான் இருக்கையில் உனக்கேன் ....
சோக கவிதை என்று .....
எப்போதாவது கேட்டிருக்கிறாயா....?

என் உள்ளத்தில் .....
காதல் சோலைகளைவிட ...
சோகங்களே அதிகம் ...
சோகங்களை மறைக்கலாம்.... 
மறக்கமுடியாது ...!!!

சோகங்களை...... 
மறைக்கத்தான் சோகக்கவிதைகள்...
எழுதுகிறேன் கண்ணே.....
சோலையில் நின்றவனைவிட ..
சோகத்தில் நின்றவன் தான் ..
சாதித்துள்ளான் ....!!!
நான் சோகத்தில் நிற்கிறேன் ....!!!
---------
நீ என் இதயத்துக்குள் ....
புகுந்தபோதும் ....
விலகிய போதும் ...
மெதுவாக வந்து .......
மெதுவாக விலகிவிட்டாயே ....
எந்த வித வலியுமில்லாமல்....
எங்கு கற்றுக்கொண்டாய் ......
இந்த கலையை ..?

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
---------
உன் .....
மடியில் உறங்க ....
அனுமதி கொடு ....
இதயத்தின் சுமையை ....
உன்னோடு பகிர்ந்து ....
கொள்கிறேன் ......
எனக்காக நீ .....
அழுதுவிடாதே.......
அழுவதற்காக......
பிறந்தவன் நானாகவே ....
இருந்து விடுகிறேன் .......!!!

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
-----
இவன் ....
காதல் தோல்வியால் ...
கவிஞனாக வில்லை ...
எல்லாவற்றிலும் ...
காதல் கொண்டதால் ...
கவிஞன் ஆனவன்.....!!!

&
கவிப்புயல் இனியவன்
இதுதான் உண்மை
----
கடலளவு ....
கற்பனையுடன் ...
காட்டாற்று ...
வெள்ளமாய்க்கரை...
புரண்டு ...
வந்த வார்த்தைகள் ...
எல்லாம் கன்னியவள்.... 
கன்னக்குழிக்குள் ...
கச்சிதமாய் மறைந்து விட்டன .....!!!

சொல்ல நினைத்துத் ...
துடித்தவை தொண்டைக்... 
குழிவறை வந்து ...
இருதலைக்கொள்ளிபோல் ...
திணறிக்கொண்டு ...
தடுமாறுகிறது ....! 

ஒத்திகை பார்த்து 
வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு 
முன்னே ஓடியேவிடுகின்றன.

கண்டவுடன் 
எப்படி மறைந்து கொள்ளலாம் 
என வெட்கப்படும் உன்னால் 
என் பாடு சொல்ல வழியில்லையே?

இப்போது சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொலவது?

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

கே இனியவனின் பிறந்தநாள் கவிதை 05