வலிக்கும் இதயத்தின் கவிதை101-110

உனக்கு .... 
முதல் நான் ... 
இறந்தாலோ .... 
எனக்கு.... 
முதல் - நீ 
இறந்தாலோ .... 
நம் .... 
கல்லறையின் ... 
வாசகம் - " மீண்டும் 
காதலிப்போம் " .... 
அடுத்த ஜென்மத்தில் ...!!! 


கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
----
நான் 
உன்னை ஏமாற்றினால் ...
என்ன செய்வாய் ...
என்று விளையாட்டுக்கு ....
கேட்டபோதே ....
என் இதயம் இறந்து விட்டது ....!!!


கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
*****
இரவே ...
விரைவாக வந்துவிடு ...
உன்னில் இருந்து ....
அழுவதே எனக்கு ....
சுகமாக இருக்கிறது ....!!!

மழையே ...
விரைவாக பொழிந்துவிடு ....
உன்னோடு சேர்ந்து ....
அழுவதே எனக்கு .....
பாதுகாப்பாக இருக்கிறது ...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
-----
நீ 
தரும் வலிகளை...
உன் முகத்துக்கு ...
சொல்ல முடியவில்லை ....
முடிந்தால் என் வரிகளை ....
பார் வலிகள் தெரியும் ...!!!

என்.... 
வரிகளை ....
வெறும் வரிகளாக ....
பார்க்காதே அந்த ...
வரிகளுக்கு ......
வலியாகிவிடும்...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
-----
நீ 
என்னை விட்டு பிரிந்து ...
பலகாலங்கள் ஆகிவிட்டது ...
பலமுறை என் இதயத்துக்கு ...
சொல்லிவிட்டேன் ....
நம்பமாட்டேன் என்கிறது ...
என் இதயம் .....!!!

ஒருமுறை ...
நீ என் இதயத்தில் இருந்த ....
இடத்துக்கு வந்து ஆறுதல் ....
சொல்லிவிட்டு போவாயா ....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
----
நிஜமான வாழ்க்கை....
கிடைக்கவில்லை ....
கற்பனையில் என்றாலும் ....
வாழவிடு ....!!!

வாழ்ந்தால் 
உன்னோடுதான் ...
வாழ்வேன் அடம்பிடிகிறது ...
மனசு .......!!! 

மடிந்தால் ....
உன் நினைவோடு மடிவேன் ....
செத்து துடிக்கிறது ....
இதயம் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
-----
உன்னோடு ....
வாழவேண்டும் என்றுதான் ....
காதல் செய்தேன் ....
உன் மௌனம் என்னை ....
கொல்கிறது....!!!

உன்னோடு வாழவேண்டும் ...
என்பதெல்லாம் கலைந்து....
உன்னோடு பேசினால் ..
போதும் என்று ஏங்குகிறேன் ...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
-----
வலிகள் மனதில் ....
வரும்போதேலாம் ....
மௌனமாக அழுவது ...
இதயம் .....!!!

உறவுகளை ....
வருத்த கூடாது ....
என்பதற்காக ....
போலியாய் சிரிக்கிறது ....
உதடு ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
----
நீ ...
தந்த ...
வலிகளை தாங்கும் ....
சக்தி எனக்கில்லை ....
நீ தந்த வலிகள் ....
என்னவென்று என் ....
கவிதைகள் சொல்லும் ....!!!

ஒன்று ....
மட்டும் செய்துவிடாதே ....
நான் தனியே இருந்து ....
அழுவதுபோல் நீயும் ...
அழுதுவிடாதே - என்னை ....
ஆறுதல் படுத்த கவிதை ...
எப்போதும் இருக்கும் ....
உன்னை ஆறுதல் படுத்த ....
என்னை தவிர யாருமில்லை ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
---
ஒரு நாளுக்கு ....
ஒரு குறுஞ்செய்தியாகினும் ....
அனுப்பி வைத்துவிடு ....
உனக்கு அது குறுஞ்செய்தி....
எனக்கு பெரும் செய்தி ....!!!

நீ 
நேரே வரவேண்டுமென்று ....
மனம் ஆசைப்படவில்லை ....
உன் நினைவில் வாழ்வே ....
ஆசைப்படுகிறேன் ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வலிக்கும் இதயத்தின் கவிதை 1-10

உபகிரகங்கள்

பொங்கல் கவிதை,பொங்கல் ஹைக்கூ ,பொங்கல் சென்ரியூ ,